சரத்குமார் வில்லனாக(வும்) தோன்றும் ‘ சண்டமாருதம்’ ஆல்பம்

சரத்குமார் வில்லனாக(வும்) தோன்றும் ‘ சண்டமாருதம்’ ஆல்பம்

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டு இரட்டை வேடத்தில் புரட்சி திலகம் சரத்குமார் நடிக்கும் திரைப்படம் “ சண்டமாருதம் “ அதுவும் கதாநாயகனாக மாறிய பின்பு முதன் முதலாக சரத்குமார் ஒரு கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஒன்றுகொன்று உருவ ஒற்றுமை, அண்ணன் – தம்பி, அப்பா – பிள்ளை போன்ற வழக்கமான இரைட்டை வேடங்களில் இல்லாமல் இரு வேறு வித்தியாசமான வில்லன் – கதாநாயகன் வேடங்களை ஏற்றிருக்கிறார். இது மட்டுமின்றி இப்படத்தில் அவர் கதாசிரியராகவும் அறிமுகமாகிறார்.திரைக்கதை வசனத்தை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதுகிறார். இப்படத்தை இயக்கும் பொறுப்பை A.வெங்கடேஷ் ஏற்றுள்ளார்.“ நான் பாக்கறதுக்குத்தான் வில்லன் ஆனா பக்கா ஹீரோ “ என வில்லனும்…“ நான் செய்வதில் எல்லாம் ஹீரோயிஷம் இருக்கும் “ என கதாநாயகனும் தனித்தனி கொள்கையுடன் மோதும் ஒரு வித்தியாசமான திரைப்படம் இந்த “ சண்டமாருதம் “ இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த படத்தில் சரத்குமாருடன் ஓவியா, மீராநந்தன் என இரு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.இத்துடன் சமுத்திரக்கனி ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார்.

error: Content is protected !!