சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த (!) சந்தானம் வழங்கும் ‘இனிமே இப்படித்தான்’ ஆல்பம்!

சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த (!) சந்தானம் வழங்கும் ‘இனிமே இப்படித்தான்’ ஆல்பம்!

ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் நடிக்கும் திரைப்படம் ‘ ‘இனிமே இப்படித்தான்’. புதுமுக இயக்குனர் இரட்டையர்கள் பிரேம் ஆனந்த், முருகன் ஆகியோர் காமெடியும் , காதலும் ஒன்றிணைந்தாற்போல் முருகானந்த் என்ற பெயரில் இயக்குனர்களாக அறிமுகம் ஆகிறார்கள்.
santhan11h
படம் பற்றி கேட்ட போது“ சந்தானத்துக்கு எங்கள் வசம் இருந்த மூன்று கதைகளும் பிடித்திருந்தது, ‘இனிமே இப்படிதான் கதையை தேர்வு செய்ததோடு இல்லாமல் அப்படத்தை எங்களையே இயக்கவும் சொன்னார். எனது ஞாபகம் சரியாக உள்ளதென்றால் ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் அவரது படத்தில் எங்களை இயக்குனர்களாக அறிமுகப் படுத்துவேன் என்றுக் கூறினார் சந்தானம். சொன்ன வார்த்தைக்கு ஒரு எழுத்து குறையாமல் நிறைவேற்றியுள்ளார். “ என ஆரம்பித்தார் இயக்குனர் இரட்டையரில் ஒருவரான பிரேம் ஆனந்த்.

“ ‘இனிமே இப்படித்தான்’ சந்தானத்திற்கு கச்சிதமான ஒரு ரொமாண்டிக் காமெடி படம். அழகான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் திரியும் வேலையில்லா இளைஞனாக வருகிறார் சந்தானம். ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். தம்பி ராமையா, FEFSI விஜயன், பிரகதி, நரேன், VTV கணேஷ் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.” எனக் கூறினார் இயக்குனர் முருகன்.

“ VTV கணேஷ் சந்தானத்திற்கு காதல் ஆலோசகராக வருகிறார் இருவரும் இணைந்து வரும் காட்சிகள் அவர்களது ஸோ கால்ட் பஞ்ச் வசனங்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அப்புறம் முக்கியமா சந்தானம் இப்படத்தில் ரிஸ்கான பல சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார் இதைப் பற்றி கேட்கும்பொழுது ‘ இனிமே இப்படித்தான்’ என்று டைமிங்கில் சொல்லி சென்றார். இது அவரது தன்னம்பிக்கையை எடுத்துக் காட்டியது. அனைத்து தரப்பு ரசிகர்களை திருப்தி படுத்தும் சந்தானத்தின் பல்வேறு முயற்சிகள் இப்படத்தை சிறப்பான ஒன்றாய் மாற்றியுள்ளது. மொத்தத்தில் முழுமை நிறைந்த ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக வருகிறது ‘இனிமே இப்படித்தான்’.” என கூட்டாக கூறினர் இயக்குனர்கள் முருகானந்த்.

error: Content is protected !!