சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் அரசியல்?-தேர்தல் ஆணையத்திடம் புகார்

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் அரசியல்?-தேர்தல் ஆணையத்திடம் புகார்

இந்திய கிரிகெட் சாதனையாளரான சச்சின் கடந்த சனிக்கிழமை அன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதே தினத்தில் அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்காக பாரத ரத்னா விருதின் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டதாக தெரிகிறது.மேலும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதால், பல்வேறு கட்சிகள் தங்களது தலைவர்களுக்கும் பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஜெய பாசிஸ் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.
nov 19 - saaaachin bharat
இவர் அனுப்பிய புகார் கடிதத்தில் , “காங்கிரஸ் கட்சியால் சச்சின் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இவருக்கு தற்போது பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சச்சினை பொறுத்தவரை அவருக்கு பல மாநிலங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. தற்போது தேர்தல் நடக்கவிருக்கும் ராஜஸ்தான், டில்லி, மிசோராம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலத்திலும் ரசிகர்கள் உண்டு. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் சச்சினுக்கு விருது வழங்கி கவவுரவத்திருப்பது சில ரசிகர்கள் மனதில் சற்று மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. எனவே விருது அறிவித்தது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.” என்று தெரிவித்துள்ளார்

RTI activist moves EC against Sachin Tendulkar getting Bharat Ratna
************************************************************************
An RTI activist Debashish Bhattacharya has written to the Election Commission of India (ECI) stating that granting of Bharat Ratna to Sachin Tendulkar is a violation of model code of conduct.

error: Content is protected !!