கொடூரமான வில்லன் வேடத்தில் சரத்குமார் நடிக்கும்”’சண்டமாருதம்’ -ஆல்பம்
சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்” என்ற படத்தை தயாரித்து கொண்டிருகிறது. இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீராநந்தன் இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார்.வசனம் எழுதி இயக்குகிறார் A.வெங்கடேஷ் .படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷிடம் கேட்டோம்….
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டு இரட்டை வேடத்தில் சரத்குமார் நடிக்கும் திரைப்படம் “ சண்டமாருதம் “
அதுவும் கதாநாயகனாக மாறிய பின்பு முதன் முதலாக சரத்குமார் ஒரு கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
ஒன்றுகொன்று உருவ ஒற்றுமை, அண்ணன் – தம்பி, அப்பா – பிள்ளை போன்ற வழக்கமான இரைட்டை வேடங்களில் இல்லாமல் இரு வேறு வித்தியாசமான வில்லன் – கதாநாயகன் வேடங்களை ஏற்றிருக்கிறார். இது மட்டுமின்றி இப்படத்தில் அவர் கதாசிரியராகவும் அறிமுகமாகிறார்.திரைக்கதை வசனத்தை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதுகிறார்.
இது ஆக்ஷன் கலந்த படம். இப்படத்திற்காக சமீபத்தில் பெரம்பூர் பின்னி மில்லில் பிரமாண்டமான கண்ணாடி அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது.பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அந்த அரங்கில் ஹீரோ சரத்குமாரும் வில்லன் சர்வேஸ்வரன் என்ற வேடத்தில் நடிக்கும் சரத்குமாரும் மோதும் சண்டைக் காட்சி ஒன்று பரபரப்பாகப் படமாக்கப்பட்டது. ஐந்து காமிரா கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டன்ட் கலைஞர்கள், பாங்காக்கிலிருந்து நான்கு ஸ்டன்ட் கலைஞர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஸ்டன்ட் காட்சி பத்து நாட்கள் படமாக்கப்பட்டது.ஓவியா, மீராநந்தன் ஆகியோரும் பங்குபெற்றனர். படத்தின் அணைத்து படப்பிடிப்பும் முடிவடைந்தது. இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீடு நடைபெற உள்ளது”