குழந்தைகள் சென்டிமென்ட் படம் “ கத சொல்லப் போறோம் “ – ஆல்பம்

குழந்தைகள்  சென்டிமென்ட் படம் “ கத சொல்லப்  போறோம் “ – ஆல்பம்

E 5 எண்டர்டைன்மென்ட்ஸ் இந்தியா (பி )லிட் வழங்க ரிலாக்ஸ் ஆட்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ கத சொல்லப் போறோம் “ என்று பெயரிட்டுள்ளனர். எஸ்.கல்யாண் – ஜே.ஜெயகிருஷ்ணன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, முன்டாசுப்பட்டி காளி, பசங்க சிவகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களான ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த்,அரவிந்த், ராகுல், சாமு, அர்ஜுன் ஆகியோர் நடிக்கிறார்கள்.கதை ,திரைக்கதை ,வசனம் எழுதி இயக்குகிறார் – எஸ்.கல்யாண். இவர் நாளைய இயக்குனர் சீசன்ஸ் – 2 பகுதியில் இருதிச்சுற்றில் “ புதியவன் “ என்ற குறும்படம் மூலம் தேர்வானவர். நாளைய இயக்குனர் போட்டியில் இவர் இயக்கிய ஏழு படங்களும் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த ஏழு படங்களும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட படம் தான்.

இதனிடையே இந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்….. ”இந்த படம் பசங்க படம் போல் சிறுவர், சிறுமிகளை பற்றிய படம். அனாதை ஆசிரமத்து மாணவர், மாணவிகளுக்கும், பக்கத்தில் உள்ள வசதியான பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையே நடக்கும் செண்டிமெண்ட் கலாட்டாதான் கதை ! இத்துடன் குழந்தை திருட்டையும், அதனால் பெற்றோர்கள் படும் வேதனையையும் இதில் பதிவு செய்திருக்கிறோம். சென்டிமெண்டில் இப்படம் உச்சத்தை தொடும்” என்றார் எஸ்.கல்யாண்.

error: Content is protected !!