கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகும் “ஜெய்ஹிந்த்-2′ ஆலபம்!

கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகும் “ஜெய்ஹிந்த்-2′ ஆலபம்!

ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த் -2.கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .படம் பற்றி அர்ஜுன் என்ன சொல்கிறார் என்று கேட்டோம்…”தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இதை உருவாக்குகிறேன். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்தது விட்டது.சமீபத்தில் பாங்காக்கில் ஒரு சண்டை காட்சியை படமாக்கினோம்.ராணுவம் சம்மந்தப்பட்ட இடம் அது. சுமார்பத்து ஏக்கர் அந்த இடம் முழுக்க உபயோகம் இல்லாத பிளைட்கள், படகுகள், கார்கள், என குவிந்து கிடந்தது. அங்கே அமெரிக்க ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதும் காட்சிகள் பத்து நாட்கள் படமானது.இது என் இயக்கத்தில் ஒரு லட்சியப் படம் என்றே சொல்லலாம். ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வியை பொறுத்தே அமைகிறது என்கிற கருத்தை வலியுறுத்தும் படமாக ஜெய்ஹிந்த் -2 இருக்கும்.

error: Content is protected !!