கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம்!- யுஜிசி அறிவுறுத்தல்!

கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம்!- யுஜிசி அறிவுறுத்தல்!

சிபிஎஸ்இ தேர்வு முடிவு வரும் வரையில், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. இதனால், கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இவ்வாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் யுஜிசி கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!