ஓட்டு போடாதவர்களுக்கு தடை!அத்வானி கடிதம்
ஒரு தேர்தலில் ஓட்டுப்போடாத வாக்காளர்கள், அடுத்த தேர்தலில் ஓட்டளிக்க தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு அத்வானி யோசனை கூறி கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்தார்.
அபராதம் மத்தியபிரதேச மாநிலம் ஜபுவா அருகே தண்ட்லா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது,”சில வெளிநாடுகளில், ஓட்டுப்போடாத வாக்காளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது. நான் இங்கு அபராதம் விதிக்க சொல்லவில்லை. தடை விதியுங்கள்
ஆனால், ஒரு தேர்தலில் ஓட்டுப்போடாத வாக்காளர்களை அடுத்த தேர்தலில் ஓட்டுப்போட அனுமதிக்கக்கூடாது. இதுகுறித்து நான் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி உள்ளேன். வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் தவறா மல் ஓட்டுப்போட வேண்டும்.”என்று அத்வானி பேசினார்.