ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எஸ்.எம்.எஸ்.மூலம் புகார் அளிக்கலாம்! -தேர்தல் ஆணையம் தகவல்!

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எஸ்.எம்.எஸ்.மூலம் புகார் அளிக்கலாம்! -தேர்தல் ஆணையம் தகவல்!

”ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம். பணம் கொடுத்தாலும், அதை வாங்க வாக்காளர்கள் மறுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக ஏராளமான புகார்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் விசாரணை என்று வரும் போது, ஆதாரத்துடன் யாரும் குற்றம் சொல்வதில்லை.தற்போது நவீன தொழில் நுட்பங்கள் எல்லாம் வந்து விட்டன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுபற்றி எஸ்.எம்.எஸ். மூலம் கூட புகார் கொடுக்கலாம். செல்போனில் எடுக்கப்படும் புகைப்பட ஆதாரம் கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற ஆதாரங்கள் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும்.” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
vote for money
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான போலீஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தலைமை தாங்கினார். தென்மண்டல ஐ.ஜி.அபய்குமார் சிங், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மதுரை சரக டி.ஐ.ஜி. ஆனந்த குமார் சோமானி, போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களைச் சந்தித்த போது,”பாராளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு குறித்து மேற்கு, வடக்கு பகுதி போலீஸ் அதிகாரிகளின் முதல்கட்ட ஆலோசனை நடந்து முடிந்து விட்டது.இரண்டாம் கட்டமாக மதுரையில் தெற்கு, மத்திய பகுதி போலீஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்தும், போலீசார் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம். பணம் கொடுத்தாலும், அதை வாங்க வாக்காளர்கள் மறுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக ஏராளமான புகார்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் விசாரணை என்று வரும் போது, ஆதாரத்துடன் யாரும் குற்றம் சொல்வதில்லை.தற்போது நவீன தொழில் நுட்பங்கள் எல்லாம் வந்து விட்டன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுபற்றி எஸ்.எம்.எஸ். மூலம் கூட புகார் கொடுக்கலாம். செல்போனில் எடுக்கப்படும் புகைப்பட ஆதாரம் கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற ஆதாரங்கள் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும்.

ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஓட்டு போடவில்லை என்பதற்கான ‘நோட்டா’ முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பாராளுமன்ற தேர்தலிலும் நோட்டா இருக்கும்.வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கான ரசீது தர முடியாது.”என்று அவர் கூறினார்.

error: Content is protected !!