”ஐயா.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!” – ஹைகோர்ட்டில் சகாயம் மனு!

”ஐயா.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!” – ஹைகோர்ட்டில் சகாயம் மனு!

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சார்பாக வக்கீல் நாகசைலா சென்னை ஹைகோர்ட்டில் புதிய மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் அவர்” கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த என்னை உயர் நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது. தற்போது நான் விசாரணை நடத்த தயாராக உள்ளேன். மதுரையில் நடந்த கிரானைட் குவாரி முறைகேடு குறித்து மட்டும் விசாரணை நடத்த வேண்டுமா அல்லது தமிழகம் முழுவதும் உள்ள கனிம வள முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டுமா என்று தெரியவில்லை.” என்று விளக்கம் கேட்டுள்ளார்.
ias sagayam
சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏராளமான கிரானைட் குவாரிகளால், அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் செயல்பட்டது குறித்தும், அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும் விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து கோர்ட் மதுரை கலெக்டராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டி அமைக்கிறோம். இந்த விசாரணை கமிட்டி, கிரானைட் முறைகேடு குறித்த அனைத்து அம்சங்களையும் விசாரணை நடத்தி, அறிக்கையை அக்டோபர் 28ம் தேதிக்குள் இந்த உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது.இதை எதிர்த்து தமிழக.அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட் வரை போய் அதில் தொல்வி அடைந்த நிலையில் தற்போது ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சார்பாக வக்கீல் நாகசைலா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர்,”கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த என்னை ஹைகோர்ட் நியமித்து உத்தரவிட்டது. தற்போது நான் விசாரணை நடத்த தயாராக உள்ளேன். மதுரையில் நடந்த கிரானைட் குவாரி முறைகேடு குறித்து மட்டும் விசாரணை நடத்த வேண்டுமா அல்லது தமிழகம் முழுவதும் உள்ள கனிம வள முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டுமா என்று தெரியவில்லை. எனவே, உயர் நீதிமன்றம் இதில் எனக்கு தெளிவுபடுத்த வேண்டும். நான் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே விசாரணைக் குழுவில் சேர்க்க அனுமதிக்க வேண்டும்”. இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

error: Content is protected !!