ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 26,570 பணியிட வாய்ப்புகள்!

ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 26,570 பணியிட வாய்ப்புகள்!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 26,570 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: Centralised Employment Notice No.01/2014

மொத்த காலியிடங்கள்: 26.570. இதில் தமிழகத்துக்கு மட்டும் 1666 பணியிடங்கள், மொத்த பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு 13,464, ஓபிசி பரிவினருக்கு 262, எஸ்சி பிரிவினருக்கு4122, எஸ்டி பிரிவினருக்கு 2464 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
jan 31 - vazhilatti indian_railway_logo_
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட்(ஏ.எல்.பி) மற்றும் டெக்னீசியன்

சம்பளம்: ரூ.5,200-20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900

வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 – 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்டு டி.வி மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திகருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறனறிவுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.02.2014

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 15.06.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத்தேர்வு, கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rrbchennai.gov.in, www.rrbbnc.gov.in, www.rrbthiruvananthapuram.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

error: Content is protected !!