ஏற்காடு இடைத்தேர்தலில் பதிவான வாக்கு 89.75 %

ஏற்காடு இடைத்தேர்தலில் பதிவான வாக்கு 89.75 %

சேலம் மாவட்ட ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் அ.தி.மு.க. கட்சி சார்பாக சரோஜாவும், தி.மு.க. கட்சி சார்பாக மாறனும் மற்ற 9 சுயேட்சைகளும் போட்டியிட்டனர்.
nov 34 - poll in yercaud
120 மையங்களின் 290 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வழக்கத்தைவிட மக்கள் மிகுந்த ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இந்த வாக்குப்பதிவிற்கு மத்திய தொழில்பாதுகாப்பு மற்றும் உள்ளூர் போலீசார் என சுமார் 3000 வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்த போது மொத்தம் 89.79 சதவிகித வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியானது. வரும் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related Posts

error: Content is protected !!