எம்.ஜி.ஆர். பாடல் வரிகளை கதையாகக் கொண்ட ’தூதன்’- மினி ஆல்பம்!

எம்.ஜி.ஆர். பாடல் வரிகளை கதையாகக் கொண்ட ’தூதன்’- மினி ஆல்பம்!

சன்மூன் பிக்சர்ஸ் சார்பில் வி.சுந்தர் தயாரிக்கும் படம் ‘தூதன்’.இதில் நாயகனாக ஜீவன் நடிக்கிறார்.சில வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் வருகிறார்.நாயகியாக கன்னட நடிகை ஜெயமாலா மகள் சௌந்தர்யா அறிமுகமாகிறார்.இப்படத்துக்கு கதை, திரைக்கதை, எழுதி செல்வா இயக்குகிறார். இவர் டைரக்டு செய்யும் 27-வது படம் இதுவாகும். ஏற்கனவே ‘நான் அவனில்லை’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் ஜீவனும் செல்வாவும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.இந்த ‘தூதன்’படம் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது,”’உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்’ என்ற எம்.ஜி.ஆர். பாடல் வரிகளை கதையாக படமாக்கி இருக்கிறேன். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் வசனத்தை குரு.சம்பத்குமார் எழுதுகிறார். ரங்கபாபாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் இசையமைக்கிறார். பாடல்களை பா.விஜய், ஏக்நாத் எழுதுகின்றனர். நடனம்: ஸ்ரீதர்” என்றார்.

error: Content is protected !!