உலக மனித வள மூலதன குறியீட்டில் இநதியா பின் தங்குகிறதோ?

உலக மனித வள மூலதன குறியீட்டில் இநதியா பின் தங்குகிறதோ?

நாட்டில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு திறன் பொருளாதார வளத்தின் அடிப்படையில் நாடுகளை தரம் பிரித்து உலக மனித வள மூலதன குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட உலக பொருளாதார அமைப்பு (டபிள்யு.இ.எப்.) நியூயார்க் நகரில் 122 நாடுகளின் தரப் பட்டியல் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இடம்பெற்றுள்ளதாகவும். சீனா 43வது இடத் திலும் பிரேசில் 57வது இடத்திலும் உள்ளதாகவும் தென் ஆப்ரிக்கா இந்தியாவைவிட பின்தங்கி 86வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 - human-resources.
இதற்கிடையில் ஆண்டுதோறும் மனிதவள அறிக்கை என்றவுடனே நம்நாட்டில் முக்கியமாக பேசப்படுவது இந்தியாவுக்கு அது கொடுத்துள்ள இடத்தைப்பற்றித்தான். முக்கிய பொறுப்பிலுள்ளவர்கள் மற்றும் அதிகம் படித்தவர்கள் கூட இந்தியாவுக்கு கொடுக்கப்படும் இடத்தைப்பற்றி குறிப்பிட்டு அதனால் நாட்டையே ஒட்டு மொத்தமாக தாழ்வாக பேசுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் நாட்டைப்பற்றி ஒரு தவறான எண்ணம் பலரது மனதிலும் ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் அப்படி பேசுபவர்கள் பலருக்கு உண்மையில் அந்த அறிக்கையின் அடிப்படைகள் மற்றும் அளவுகோல்கள் பற்றி சரியாகத் தெரியாது. சர்வதேச அறிக்கை என்றவுடனேயே அதற்கு அதிகப்படியான மரியாதை கொடுத்து அதிலுள்ள விபரங்களை மிகைப்படுத்தி கருத்துகளை சொல்லிவிடுகின்றனர். நாடுகளின் மனிதவளத்தை கணக்கிட அந்த அறிக்கை மூன்று காரணிகளை எடுத்துக்கொள்கிறது.

முதலாவது, மனிதர்களின் சராசரி ஆயுள் பற்றிய விபரம். இரண்டாவது, கல்வி பற்றியது. அதற்காக இளைஞர்களின் படிப்பு விகிதம் மற்றும் படிப்பவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மூன்றாவதாக வாழ்க்கைத்தரம் பற்றிய விபரம். அதற்காக நாட்டு மக்களின் சராசரி வருமானம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாட்டின் மொத்த வருமானம் மக்கள் தொகையால் வகுக்கப்பட்டு சராசரி வருமானம் கணக்கிடப்படுகிறது.

அந்த அறிக்கையில் மனிதவள முன்னேற்ற குறியீட்டைத்தவிர ஏழ்மைக்கான குறியீடு, பாலின முன்னேற்றக்குறியீடு மற்றும் பாலின ஆளுமை குறியீடு ஆகியவையும் கணக்கிட்டு கொடுக்கப்படுகின்றன. பாலின குறியீடுகளில் பெண்கள் முன்னேற்றம், ஆட்சி மற்றும் அதிகார பொறுப்புகளில் அவர்களின் பங்கு, வருமானம் மற்றும் ஆண், பெண் இடையேயுள்ள வித்தியாசங்கள் போன்ற விபரங்கள் 1995ம் ஆண்டு முதல் கொடுக்கப்படுகின்றன.

மனிதவள குறியீட்டின் அடிப்படையில் எடுத்துக்கொண்ட நாடுகளை இந்த ஆண்டின் அறிக்கை நான்கு பிரிவுகளாக பட்டியலிட்டுள்ளது. அதன்படி 38 நாடுகள் மிக அதிக மனிதவளத்தை கொண்டதாகவும், 45 நாடுகள் அதிக வளத்தை கொண்டதாகவும், 75 நாடுகள் சுமாரான வளத்தை உடையதாகவும், 24 நாடுகள் குறைந்த வளத்தையே பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் உலகின் பணக்கார நாடுகள் மிக அதிக மனித வளத்தை பெற்றுள்ளதாகவும், ஆப்பிரிக்க பகுதியை சேர்ந்த நாடுகள் மிகக்குறைந்த வளத்தை உடையதாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. உலகின் மற்ற நாடுகள் இந்த இரண்டு பிரிவுகளுக்கு இடையில் வருகின்றன. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசியப்பகுதி நாடுகள் சுமாரான மனிதவள முன்னேற்றமுடைய நாடுகளின் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

தற்போதைய பட்டியலில் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளின் தனித்தன்மை வரையறையில் இந்தியா அதிக புள்ளிகள் பெற்றுள்ளது. அதேநேரத்தில், தொழிலாளர்களின் சுகாதாரம், வசதி ஆகியவற்றில் மிகவும் பின்தங்கி நிலையில் உள்ளது. தொழிலாளர்களின் உடல் நலம், சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் மிகவும் குறைந்த புள்ளிகள் உள்பட வேறு சில காரணிகளும் மொத்த குறியீடு பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

எல்லா பிரிவுகளிலும் சிறப்பிடம் பெற்ற சுவிட்சர்லாந்து பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் பின்லாந்து, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, நார்வே, இங்கிலாந்து, டென்மார்க், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா 16வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தில் அதாவது 122வது இடத்திற்கு யேமன் தள்ளப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் 112வது இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாடும், எப்படி தங்களின் மனித வள ஆற்றலை பயன்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ள பயன்படுத்தும் புதிய கணிப்புதான் மனித வள மூலதன குறியீடு. பின்னர் நீண்ட கால தொழிலாளர் உழைப்பு திறன் பொருளாதார வளத்தின் அடிப்படையில் உலகில் உள்ள நாடுகள் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் மேம்பாடு, உடல் நலன், கல்வி மற்றும் திறமை ஆகிய நான்கு பிரிவுகள் , கல்வி, உடல்நலன், சுகாதாரம், உழைப்பாளர் சக்தி, வேலைவாய்ப்பு, மேம்பாட்டு சூழல் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்று உலக பொருளாதார அமைப்பின் நிர்வாக தலைவர் ஹலூஸ் ஸ்வாப் தெரிவித்துள்ளார்.

.

Related Posts

error: Content is protected !!