உசிலம்பட்டியில் நடக்கும் கதையான “போர்க்குதிரை”!ஆல்பம்

உசிலம்பட்டியில் நடக்கும் கதையான “போர்க்குதிரை”!ஆல்பம்

விரைவில் திரைக்கு வர உள்ள ”போர்க்குதிரை”…1980-ல் உசிலம்பட்டியில் நடக்கும் கதை, மதுரை மண்ணின் மனமும் கலாச்சாரத்தின் பிண்ணனியிலும், மதுரை சுற்று வட்டார பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.1980-ல் காதல் எந்தளவுக்கு உன்னதமாக இருந்தது மற்றும் குடும்பங்களில் அண்ணன், தங்கை, அம்மா, அப்பா பாசம், எந்தளவுக்கு இனக்கமாக இருந்தது என்பது பற்றியும், மற்றும் நாம் ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போது அங்கு நமக்கு ஒரு நல்ல அனுபவத்தையும் சில சமயங்களில் கெட்ட அனுபவத்தையும் கொடுக்கும்.அது போல கதாநாயகன் காளிக்கு உசிலம்பட்டி எந்த மாதிரியான அனுபவத்தை கொடுக்கிறது, அதை அவன் எவ்வாறு போர் குணம் கொண்டு சந்திக்கிறான் என்பதை ஒர் அழகான காதல், நட்பு, குடும்ப பாசம், யதார்த்தமான வியக்க வைக்கும் சண்டை காட்சிகளுடன் கலந்து இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் உடைகள், இடங்கள், பொருட்கள், பாடல்கள், காட்சி அமைப்புகள் அனைத்தும் ரசிகர்களை 1980-க்கே கொண்டு செல்லுமாம்,ஓர் அப்பாவி இளைஞனுக்கும் அராஜக காரர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமே போர்க்குதிரை.

error: Content is protected !!