இஸ்ரோ-வின் அதிநவீன ‘ஜிசாட் – 24’ செயற்கைக்கோள்: ஜூன் 22 விண்ணில் ஏவப்படும்!

இஸ்ரோ-வின் அதிநவீன ‘ஜிசாட் – 24’ செயற்கைக்கோள்: ஜூன் 22 விண்ணில் ஏவப்படும்!

ஸ்ரோவின் தகவல் தொடர்பு சேவைக்கான அதிநவீன ஜிசாட்-24 செயற்கைக்கோள் ஏரியன் 5 ராக்கெட் மூலம் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஜூன் 22-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-24 என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்துள்ளது. 4,180 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், இஸ்ரோவின் 42-வது தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும்.

அதிக எடை உடைய செயற்கைக்கோள் என்பதால் ஐரோப்பிய நாடான பிரான்சின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து கனரக ராக்கெட்டான ஏரியன்-5 மூலம் ஜூன் 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஏரியன் 5 ராக்கெட்டில் மலேசியாவுக்குச் சொந்தமான மீசாட் – 3டி செயற்கைக்கோளும் ஏவப்பட உள்ளது. இதற்காக, விமானம் மூலம் செயற்கைக்கோள் கடந்த மே 17-ம் தேதி கொரு ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த ஜிசாட்-24 செயற்கைக்கோளில் க்யூ பேன்ட் டிரான்ஸ்பாண்டர் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது டிடிஎச் டெலிவிஷன் மற்றும் செல்போன் சேவைக்குப் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!