இலங்கைத் தமிழர் விஷயத்தில் யாரெல்லாம் பொய் சொல்கிறார்கள்? By டி.எஸ்.வி. ஹரி

இலங்கைத் தமிழர் விஷயத்தில் யாரெல்லாம் பொய் சொல்கிறார்கள்? By டி.எஸ்.வி. ஹரி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 நபர்களுக்கு ஆயுள் தண்டனை என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பை கொஞ்சம் நீட்டி, அவர்களுக்கு விடுதலை என தமிழக அரசு, தனது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அறிவித்துள்ளது. இது சட்டப்படி செல்லுமா செல்லாதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.மறைந்த எனது தந்தைக்கே நீதி மறுக்கப்படும் இந்த நாட்டில் யாருக்குத் தான் நீதி கிடைக்கும் என்ற கேள்வியை ராகுல் காந்தி எழுப்பி உள்ளார்.
Ltte
ஜெயலலிதாவைப் பொறுத்தவரை – இது ஒரு அரசியல் விளையாட்டு.

சாந்தன், பேரறிவாளன், முருகன் மற்றும் நளினி ஆகியோருக்கு உடனே விடுதலை என்ற ஸ்டண்ட் – ஜெயலலிதா வரும் பாராளுமன்றத் தேர்தல்களில் 40/40 ஜெயிக்க உதவலாம்.

ஏற்கனவே சுத்தமாகச் சிதறிய சூறைத் தேங்காய் ஆகிவிட்ட எதிர்கட்சிகளை சுத்தமாக வாஷ் அவுட் செய்ய ஜெயலலிதாவின் இந்த மூவ் உதவக்கூடும்.

ஆனால் அதை விட ஒரு பெரிய கேள்வி உள்ளது.

இலங்கைத் தமிழர் விஷயத்தில் யாரெல்லாம் பொய் சொல்கிறார்கள்?

ஈழ விஷயத்தில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

எம் ஜி ஆர் நேரடியாக புலிகளுக்கு பண உதவி செய்தார் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு அவரது ஆட்சியின்போது எல்லா ஈழத் தீவிரவாதக் குழுக்களிடமிருந்தும் ஆயுதங்களை எம் ஜி ஆரின் கட்டளைப்படி 1986ல் காவல்துறைத் தலைவர் மோஹன் தாஸ் ஒரே நாளில் பறித்ததும் மிகவும் உண்மை.

ஜெயலலிதா அம்மையார் ஆரம்ப முதலே புலிகள் பயங்கரவாதிகள் எனச் சொல்லி வந்திருக்கிறார்.

இந்தியாவின் உள் நாட்டு விஷயத்தில் தலையிட்ட புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள் கண்டிக்கத் தக்கவை எனச் சொல்லி வருகிறார்.

இது சரியான அணுகுமுறை என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு அடிப்படைக் காரணம்:

இலங்கையின் கொடுங்கோலன் இராஜபக்ஷ அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்ததை விட அதிக எண்ணிக்கையில் அப்பாவி ஈழத் தமிழர்கள் எழவுகளுக்குப் பிரபாகரன் காரணம் என்பது ஒரு மிகவும் கசப்பான உண்மை!

சில விஷயங்களை நாம் நினைவில் கொள்வது நல்லது:

சிங்களர்கள் யார்?

இலங்கையில் முதலில் இருந்தவர்கள் தமிழர்கள்.

இராவணேசுவரன் – ஒரு தமிழ் பேசிய மன்னன். யாருக்காவது சந்தேகமிருந்தால் – இராமாயணத்தை மீண்டும் படிக்கவும்.

தமிழ் படிப்பதில் சிக்கலுள்ளவர்களுக்கு உதவியாக ஒரு சில வார்த்தைகள்:

கிறித்தவ சரித்திர ஆராய்ச்சியாளர்களால், சுமார் 3000 வருடங்கள் முன்பு நிகழ்ந்த சரித்திர நிகழ்வாக இராமாயணம் கருதப்படுகிறது.

பிறர் இந்த நிகழ்ச்சிக் கோர்வை பல்லாயிரக்கணக்கான வருடங்கள் முன்பு நடந்திருக்கலாம் எனச் சொன்னாலும், அதற்கான சரியான ஆதாரங்களை அளித்ததாகத் தெரியவில்லை.

பொதுவாக, இராமாயணம் என்ற ஒரு நிகழ்வு நிகழாததாக, தி.க, தி.மு.க போன்ற சில அமைப்புக்களைத் தவிர, யாருமே மறுக்கவில்லை.

இராமாயணத்தின் ஹீரோ இராம பிரான், கடவுளின் அவதாரமாகக் கருதப்பட்டுகிறார்.

அந்த காதையின் முக்கிய வில்லன் இராவணன்.

இராவணன் விஸ்வகர்மா என்ற தேவ சிற்பியின் மைந்தன் எனவும், தனது உடன்பிறப்பான குபேரனின் அரியணையை நயவஞ்சகமாகப் பறித்து ஆட்சியைப் பிடித்தான் எனவும் நம்பப்படுகிறது.

இராவணன் அரக்கர் [Rakshasaa] அல்லது வேடர்கள் வம்சத்து பெண் ஒருவருக்கும் அந்தண வகுப்பைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் பிறந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

பொதுவாக, இராவணன் தனது ஆட்சியை நன்கு நடத்தியதாகவும், தனது தலை நகரை [இன்றைய திரிகோண மலை என நம்பப்படும் இடம்] தங்கத்தாலும் தந்தத்தாலும், பளிங்காலும் இழைத்தான் எனச் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்: வால்மீகி இராமயணம், கம்ப இராமாயணம் தவிரhttp://en.wikipedia.org/wiki/Sri_Lanka

மஹாபாரதத்தில் – சிங்களவர்கள் எனக் கூறப்படும் ஒரு பழங்குடி இனத்தவர்கள் கௌரவர்களுடன் ஒன்று சேர்ந்து, பாண்டவர்களுக்கு – கிருஷ்ண பரமாத்மா தலைமை தாங்கிய நியாய அணிக்கு – எதிராகப் போரிட்டுத் தோற்ற விவரத்தை வேதங்களின் காப்பாளர் வியாசர் பெருமான், தனது மஹாபாரத காவியத்தின் வாயிலாக விவரித்துள்ளார்.

சந்தேகமுள்ளவர்கள் – வியாச பாரதத்தை படிக்கவும்.

Wikipedia உதவி ஆதாரங்கள்:

http://en.wikipedia.org/wiki/Sinhala_Kingdom

மஹாபாரதம் பகுதி 1 அத்தியாயம் 177

வஸிஷ்டரின் ஆசிரமத்தை விசுவாமித்திரரின் என்ற மன்னரின் படைகள், தெய்வீக கோமாதாவான காமதேனுவைக் கடத்தும் எண்ணத்துடன் தாக்கியபோது அந்த தெய்வீக பால்சுரக்கும் கற்பக விருட்சம், தன்னைக் காக்க, பல படைகளை உருவாக்கிற்று.

அதன் வாயிலிருந்து உருவான வமசத்தினரின் பெயர் சிங்களர்கள்!
மஹாபாரதம் பகுதி 2 அத்தியாயங்கள் 33, 51

யுதிஷ்டிரனின் அஸ்வமேத யாகத்தில் கலந்து கொண்டவர்களுள் சிங்களர்கள் என்ற ம்லேச்சர்கள் கடற்கரையில் கண்டெடுத்த
பல அரிய முத்துக்கள் பொன்ற விலை உயர்ந்த பொருட்களை தருமத்தின் உருவமெனக் கருதப்பட்ட யிதிஷ்டிரன் என்ற சக்கிரவத்திக்குப் பரிசளித்தனர்.

குறிப்பு: ம்லேச்சர்களை அசிங்கம் பிடித்த, அருவருக்கத்தக்க சோம்பேரி மனிதர்கள் என பல ஸம்ஸ்கிருத நிகண்டுக்கள் வருணிக்கின்றன.

மஹாபாரதம் பகுதி 7 அத்தியாயம் 20

குருக்ஷேத்திரப் போரின்போது, துரோணர் வகுத்த கருட வியூஹத்தில் சிங்களர்கள் அணிதிரண்டு நின்றனர்.

இன்று சிங்களவர்கள் தங்களை பௌத்தர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர்.

பௌத்த மதம் சுமார் 2500 வருடங்கள் முன்பு துவங்கியதாக சரித்திர ஆதாரங்கள் கூறுகின்றன.

பொதுவாக இந்த மதத்தில் தெராவாடா மஹாயானம் என இரண்டு பிரிவுகள் உண்டு.

இலங்கையில் பெரும்பாலானோர் தெராவாடா பௌத்தப்பிரிவினைப் பின்பற்றுகிறனர்.

ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Buddhism

நிலை இதுவெனில், பௌத்த மதம் சுமார் 2500 வருடங்கள் முன்புதான் – பாரதத்திலிருந்து இலங்கை சென்றிருக்கவேண்டும்.
இந்தக் கூற்றை அதே விகிபேடியா சுட்டிக் காண்பிக்கின்றது:

ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Sinhala_people

அதனை இலங்கைக்கு கொண்டு சென்றவர்களுள் முக்கியமானவர்கள் – கலிங்க நாட்டு [இன்றைய பாரத்த்தின் ஒரிசா மாநிலம்] இளவரசன் விஜயன், மற்றும் அசோகச் சக்கிரவர்த்தியின் ஒரே ஆண் மகன் மஹிந்தன்.

ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Sinhala_people

[குறிப்பு: பல சிங்களவர்களுக்கு இன்று தமிழ்ப் பெயர்கள் உண்டு. உதாரணம்: இலங்கைக் கிரிக்கட் ஆட்டக்காரன் மறவன் அத்தப்பட்டூ.

மறவன் என்பதற்கு நான் தமிழில் பொருள் கூறவேண்டும் எனத் தேவை இல்லை.

அத்தப்பட்டூ – இன்றைய இந்திய கிரிக்கெட்டின் கௌரவ சாம்ராஜ்யமாகக் கருதப்படும் Zee ஸ்தாபனத்தின் Indian Cricket League விளையாடினார் என்பது உண்மை. அவர் – இந்திய வீரர்கள் – இலங்கையின் சில ஆட்டக்காரர்களுடன் சூதாட்ட ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டைச் சுமத்தினார்.

Board for Control of Cricket in India – BCCI தன்னை நியாய அணி எனவும், ICL அதர்ம அணி எனவும் சொல்கிறது. அதை நான் ஏற்கிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனால் அது பிறரால் ஏற்கப்பட்டுவிட்டது!

மறுபடியும் மஹாபாரதச் சாயலா?

ஆம், அய்யா!]

ஆக, சுமார் 3000 வருடங்கள் முன்பு, இன்று தனி இனம் என வருணிக்கப்படும் சிங்களவன் – தமிழ் தான் பேசினான்… சுருக்கமாக … தமிழன்.

விஜயன் என்ற கலிங்க இளவரசன் தன்னுடன் கொண்டு சென்ற வங்க-ஒரிய மொழிக் கலவை, பௌத்த மதம் ஆகிய விதைகளை இலங்கையில் நட்டான்.

விஜயனின் சரித்திரம் கொஞ்சம் விசித்திரமானது.

பௌத்த மதத்தின் மஹாவம்ச ஏடுகளின்படி விஜயன் இலங்கையை சுமார் 60 ஆண்டுகள் – அதாவது – சுமார் 2500 ஆண்டுகள் முன்பு ஆண்டதாக நம்பப்படுகிறது.

இலங்கை அரசு வெளியிட்டுள்ள ஆதாரங்களின் படி ஒரு வங்க மன்னன் தனது மகளை கலிங்கத்தின் வேறொரு மன்னருக்கு மணம் முடித்து அனுப்பி வைத்தான்.

அந்த ஜோடியின் மகளது பெயர் சுப்பதேவி.

காம வெறி பிடித்த சுப்பதேவி – ஒரு “சிங்கத்தனமான” உயிரினத்துடன் உடலுறவு கொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்றாளாம்.

அவர்களது பெயர்கள்: ஸிம்ஹபாஹு என்ற ஆண், ஸிம்ஹசீவளீ என்ற பெண்.

தன்னை அரியணை ஏறவிட மறுத்த தந்தையைக் கொன்று தனது உடன்பிறப்பையே மணந்த ஸிம்ஹபாஹு, அவள் மூலம் பெற்றெடுத்த மூத்த மகனின் பெயர் விஜயன்.

[குறிப்பு: இதென்ன அசிங்கம் எனக் கேட்போரது குரல் காதில் விழுகிறது. இதற்கான ஆதாரங்களை அளித்தது இலங்கையின் அரசுக் குறிப்பு தான் அய்யா!]

உள்ளூர் அரசியல் காரணங்களால் தனக்கு அரியணை ஏற வக்கிலாத நிலையை உணர்ந்த விஜயன், தன்னுடன் சுமார் 700 ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு கள்ளத் தோணிகள் ஏறி சுமார் 2500 ஆண்டுகள் முன்பு இலங்கையைச் சென்றடைந்தான்.

அங்கு குவேனி என்ற தமிழ் பேசும் வேடர் குல இளவரசியை மணந்து … அவரது நாட்டைக் கைப்பற்றி, சில வருடங்களில் அவரையே நாடு கடத்தி … தனக்கென ஒரு நாட்டை ஏற்படுத்தி அதன் நம்பிக்கை பௌத்த மதம் எனக் கூறி அதற்குத் தன்னையே சக்கிரவர்த்தியாக நியமித்துக் கொண்ட விஜயன் ஒரு கொடுங்கோல மன்னன்.

[குறிப்பு: இதையும் இலங்கை அரசின் குறிப்புகள் தான் கூறுகின்றன!]

ஆனால், கலிங்க நாட்டில் அசோகச் சக்கிரவர்த்தி நடத்திய இரத்தவெறியாட்டத்தின் விளைவுகளைக் கண்டு வெறுப்படைந்த அவரது மகன் மஹிந்தனும் மகள் சங்க மித்திரையும் நாட்டையும், அதன் அரியணையையும் துறந்து, பௌத்த மதத்தைப் பரப்பும் பிக்கு/பிக்குனியாக உலகப் பயணம் மேற்கொண்ட போது, கடல் கடந்து சென்ற முதல் நாடு – இலங்கை.

[குறிப்பு: போரில் வெற்றி பெற்ற அசோகன், கலிங்கத்து இளவரசனை தனது காலில் விழ உத்திரவிட்டான். “என்னை எஜமானனாக ஏற்றுக்கொள்” என்றான். இளவரசனோ …”நீ போரில் வெற்றி பெற்றது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால் உன்னை நான் எஜமானனாக ஏற்க எனது உள்ளத்தை நீ வெல்ல வேண்டும். அது தான் நிகழவில்லையே,” என்றான். “இந்த அடங்காப்பிடாரி இளைஞனது தலையைக் கொய்து என் காலடியில் போடுங்கள்!” என உறுமிய அசோகனிடம், “அது உன்னால் முடியும், மன்னா! ஆனால், அதைத் தானே எண்ணிலடங்காப் பிணம் தின்னிக் கழுகுகள் போர்களத்தில் – உன் வெறியாட்டத்திற்குப் பின்பு செய்கின்றன!” எனக் கொக்கரித்தான். போர்க்களம் சென்ற அசோகனின் கண்களுக்கு பல்லாயிரக்கணக்கான பிணம் தின்னிக் கழுகுகளின் கழுத்தின்மீதுள்ள சிரங்கள் தன்னுடையவையாகத் தெரிந்தன. ஆயுதத்தைக் கீழே போட்டான். அமைதியை நாடினான். பௌத்த மதத்தைத் தழுவினான். இப்படியான ஒரு நிக்ழ்ச்சிக் கோர்வை நடந்ததாக ஒரு நாடகம் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது. பம்பாயில், இந்த நாடகத்தில் … பள்ளிக்காலத்தில் … அசோகச் சக்கிரவர்த்தியாக, நான் வேடமிட்டு நடித்ததால் இது நினைவில் உள்ளது. உண்மையில் அவ்வாறு தான் அக்காலத்தில் நிகழ்ந்ததா என நான் அறியேன்.]

கலிங்கத்தின் போருக்குப் பின்பு பௌத்த மதத்தைத் தழுவிய சக்கிரவர்த்தி அசோகனின் படை, பணம், பலம் ஆகியவை ஒரு புறம் உதவ …. தங்களது மதமான பௌத்தத்தைப் பின்பற்றி இலங்கையில் அண்ட விஜயனைப் போற்ற அவர்கள் முடிவெடுத்து உதவ … சிங்களம் என்ற “தனி இனம்” உருவானதாக அந்தக் காலத்து சரித்திரத்தில் சில படித்த முட்டாள்கள் பொய்யெழுதினர்.

விஜயனுக்கும் அவனது வம்சா வழியினருக்கும் பெண் கொடுத்துதவிய புண்ணியவான்களுள் மதுரையை ஆண்ட, தமிழ் பேசிய பாண்டிய மன்னர்கள் முக்கியமானர்வர்கள்!

[குறிப்பு: பௌத்த மதத்திற்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்போருக்காக ஒரு சிறு விளக்கம். கற்பின் திருவுருமாகக் கருதப்படும் கண்ணகி ஒரு சமணப் பெண். அவருக்கு நடந்த அநீதியை சிலப்பதிகாரம் என்ற காதை மூலமாக உலகுக்குணர்த்திய இளங்கோவடிகள் ஒரு பௌத்தர்!

சனாதன தர்மம் எனு ஹிந்து மதத்தில் நுழந்துவிட்ட அக்கிரமங்களை சீர் செய்ய சமண மதமும், அதில் முளைத்த காளாங்களை விலக்க பௌத்த மதமும், பௌத்த மதத்தால் ஏறபடத் துவங்கிய தீய பழக்கங்களைக் களைய ஆதி சங்கர பகவத்பாதர் ஷண்மதங்களையும் ஸ்தாபித்தனர் என்கிறது பாரத்தின் வரலாறு.]

உள்ளூர் அரசியல் சிக்கல்கள், மன்னர்களின் குடிமிபிடி சண்டைகள், சிறிய போர்கள் … இப்படியான விஷயங்களால் … சிங்களவர்கள் என்ற சோம்பேரி பழங்குடி இனத்தவர்கள் தங்களது வாழ்வு முறையைத் தொடர்வதில் தான் தங்களுக்கு லாபம் என கணக்கிட்ட ஒரு வர்க்கம், வக்கிரமாக, என்றுமே இல்லாத ஒரு புது “சிங்கள இனத்தை” ஈனத்தமான அரசியல் ஆதாயம் கருதி இருப்பதாகக் கதை கட்டியது.

அதன் மொழி … ஸம்ஸ்கிருதம், பாலி, இன்றைய ஒறியா ஆகிய மொழிகளின் கலவையான சிங்களம். எழுத்துக்கள் கூடி ஒறிய மொழியின் காப்பி எனலாம்.

மதம் – இந்து மதத்தின் குழப்பங்களை விலக்க அமைதியின் திருஉருவான புத்தர் பெருமான் உருவாக்கிய பௌத்தம்.

[குறிப்பு: புத்தர் ஜீவ காருண்யத்தின் திருவுருவம். ஒரு பூச்சி கூடத் தனது காலடியில் நசுங்காதிருக்கும் அளவுக்கு ஜாக்கிரதையாக நடந்து செல்வார் என மஹாவம்சம் சொல்கிறது. ஆனால், தங்களைப் பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிங்களவர்கள், தினசரி, ஊர்வன, நகர்வன பறப்பன, ஏன் மனிதனாய் நடப்பன வர்க்கத்தினரை, ருசித்து ஒரு கட்டு கட்டுகிறார்கள். என்ன பௌத்தமோ! இந்தக் கருத்துக்களும் இலங்கை அரசின் குறிப்புக்களிலிருந்து தான் திரட்டப்பட்டுள்ளன!]

ஆக, சிங்கள இனம் ஒரு தனி இனம் எனக் கூறுவது வெறும் அரசியல் பம்மாத்து.

பாரதத்தில் நிகழ்ந்தது போல இலங்கையிலும் உள்ளூர் மக்கள் மாக்களாகி, தங்களின் பங்காளிகளை வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுத்து, நாட்டை வெண் தோல் அன்னியர்களுக்குத் தாரை வார்த்தனர்.

1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது.

உடனே சர் ஜான் கொத்தலாவல என்ற அராத்து அரசியல்வாதியின் அடாவடித்தனத்தால் அலங்கோல தரித்திரமும் கிடைத்தது!

அக்காலகட்டத்தில் இலங்கையில் – சிங்களவர்களுக்கு முக்கியமான 2 கட்சிகள் இருந்தன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி [Sri Lanka Freedom Party] மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி [United National Party].

தமிழர்களுக்கென ஒரே மாதிரி வாக்களிக்கும் திறன் கொண்ட கட்சிதான் புழக்கத்தில் இருந்தது. இதற்குத் தலைமை தாங்கியவர்கள் எஸ் ஜே வி செல்வ நாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம்.

1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டபோது … கட்சியில் யாருக்கு மேலிடம், யார் மேலிடத்தின் மணி முடி எனக் குழப்பம் வந்தது …

அக்காலகட்டத்தில் – இலங்கையை ஆளப்போவது எந்தக் கட்சி என முடிவெடுக்கும் திறன் தமிழர்களிடம் இருந்தது. காரணம் – சுமார் 20 பாராளுமன்றத் தொகுதிகளில் வெற்றி யாருக்கு என தமிழர்கள் தான் முடிவெடுக்க முடியும் எனும் நிலை இருந்தது.

அதாவது. எண்ணிக்கையில் சிங்களவர்கள் அதிகம் – ஆனால் முடியின் முடிவு தமிழன் கையில்.

ஒன்றாக இருந்த தமிழர்கள் அரசியலால் பிரிந்தனர்.

பொன்னம்பலம் தன்னை அகில சிலோன் தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டு அன்று ஆட்சியைப் பிடித்திருந்த ஒட்டுமொத்த இலங்கையின் ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு கூட்டணி வைத்தார்.

அதற்கு உடனே கைமேல் பலன் கிடைத்தது.

அகில சிலோன் தேசியக் காங்கிரஸ் கட்சி – மத்திய இலங்கையில் பணி புரியும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பிரபலமான காலம் அது.

சோம்பேரி சிங்களவர்களை நம்ப மறுத்த வெள்ளை தோட்ட முதலாளிகள் சுமார் 150 வருடங்கள் முன்பு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தவர்கள் தான் “மலையகத் தமிழர்கள்” எனும் தோட்டத் தொழிலாளிகள்.

வெள்ளையனின் அடிமைகளாக, அருகாமையில் வாழும் சிங்களக் காடையர்களுக்கு பயந்து வாழும் புழுபூச்சிகளாக இந்த மலையகத் தமிழர்கள் பரிணமித்தனர்.

அவர்களது தலைவர் பொன்னம்பலம்.

எண்ணிக்கையில் குறைவு … கொஞ்சம் அறிவு மட்டு … எனப் பொன்னம்பலமும் அவரது ஆதரவாளர்களும் கணக்கிடப்பட்டனர்.

பிரதமர் கொத்தலாவல – ஒரே கையெழுத்தில் மலையகத் தமிழர்கள் இலங்கையின் குடியுரிமை இல்லாதவர்கள் என உத்திரவு பிறப்பித்தார்.

பொன்னம்பலத்தின் மீதுள்ள யாழ் வாழ் தமிழர்களின் காழ்ப்புணர்வு அக்காலகட்டத்தில், உச்சகட்டத்தில் இருக்க … மலையகத் தமிழர்கள் – சிங்களவர்களைப் போன்ற கள்ளத் தோணிகள் என இகழ் பெற்று – இலங்கையின் முக்கிய தமிழர் குழாமிலிருந்து பிரிக்கப்பட்டனர்.

அப்போது முதல் தமிழர்களுக்கு இலங்கையில் தொந்தரவுகள் ஆரம்பித்தன.

தமிழர்களின் வாக்குகள் குறைந்தால், தங்களுக்கு வாழ்வுண்டு என சிங்கள அரசியல்வாதிகள் நம்பிச் செயல்படத்துவங்கினார்கள், செயல்பட்டு வருகிறார்கள்.

அதில் ஒரு அளவுக்கு உண்மை இருப்பதை 1977 இலங்கையின் பொதுத் தேர்தல்கள் நிரூபித்தன.

அதைக் கொஞ்சம் பின்னால் பார்ப்போம்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்த பொன்னம்பலத்திற்கு எதிராக – செல்வ நாயகம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியடன் கூட்டு சேர்ந்தார் … 1956 முதல் 65 வரைப் பேசிப் பார்த்தார்.

தனது நண்பன் எனக் கருதிய ஸாலமன் வெஸ்டு ரிட்ஜுவே டயாஸ் பண்டாரநாயகா [SWRD Bandaranaike] என்ற சிங்கள அரசியல்வாதியிடம் ஏமாந்தார் செல்வா.

ஸலமன் செல்வாவுடன் ஒரு ஒப்பந்தத்தை 1957ல் உருவாகிது

அதன்படி தமிழர்களுக்கு சம உரிமை என்றெல்லாம் பேசப்பட்டது.

தங்களை ஒரு தனி “சிங்கள இனம்” என வருணிக்கப்பட்டதில் கௌரவம் கிடைத்ததாக எண்ணிய ஒரு கும்பலின் காழ்ப்புணர்வு எனும் குட்டையிலேயே அரசியல் ஆதாயம் என்ற மீன்களை சுலபமாகப் பிடித்துப் பழக்கப்பட்டுள்ள அரசியல்வாதிக் கும்பலுக்கு இதில் அபாயம் தெரிந்தது.

துரோக ஒப்பந்தம் என அது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் டட்லீ சேன நாயகா மற்றும் ஜெயவர்த்தன ஆகியோரால் வருணிக்கப்பட, ஒப்பந்தத்தை ஒழிக்க கொழும்பிலிருந்து ஐ.தே.க வின் ஊர்வலம் புத்தர் பெருமானின் பற்-கோவில் உள்ள கண்டி நகரை நோக்கிக் கிளம்பியது.

ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சி இதற்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட … ஸலமன் டயாஸ் அரசியலில் ஈடுபட … ஒப்பந்தத்தை கிழித்தார்.

உள் நாட்டுப் போர் வெடித்தது.

சில நூறு தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அதற்கு தலைமை தாங்க அமைதியையே நம்புபவர்கள் எனத் தங்களைக் காண்பித்துக் கொல்லும் [தட்டெழுத்துப் பிழை அல்ல] புத்த பிக்குக்கள் கிளம்பினர்.

அதற்கு முக்கிய ஆலோசகர் தல்டுவ சோமராம என்ற ஸாலமனின் மனைவிக்கு “மிகவும் நெருக்கமான” ஒரு பௌத்த பிக்கு!

கிறித்தவ குடம்பத்தில் பிறந்திருந்த பண்டா, ஒரு மதம் மாறிய, பௌத்த வெறியர்.

செப்டம்பர் 25 1959 அன்று தல்டுவ சோமராம ஸாலமனின் வீட்டினுள் நுழைகையில் இடுப்பின் துப்பாக்கியை மறைத்துக்கொண்டு நுழைந்தார். அடுத்த நாள் பண்டாவை சுட்டுக் கொன்றார்.

சிறிது காலம் செல்வா ஐ.தே.க. தலைவர்களிடம் பேசிப் பார்த்தார்.

டட்லீ ஏதோ கருணை காண்பிப்பது போன்ற நினைப்பை வெளிப்படுத்தியபோது … பண்டாவின் விதவை சிரிமாவோ … அந்த எண்ணத்தை எதிர்த்து கண்டியிலிருந்து கொழும்புக்கு ஊர்வலம் வந்து அரசியல் ஆதாயம் தேடி … விரைவில் SLFP தலைவராகி, உலகின் முதல் பெண் பிரதமரானார்.

குறிப்பு: கிறித்தவ மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறிய ஸாலமனைக் கொன்ற பௌத்த பிக்கு சோமராமா 1962ல் தூக்கிலிடப்படப்படும் முன்னர் கிறித்தவராக மாறினார்!

1961ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டது.

சீன சப்பை மூக்கர்கள் உடனே சிரிமாவோவிடம் நெருங்கி … இந்தியாவுக்கு நெருக்கடி என்றால் இலங்கைக்கு லாபம் எனத் தலையணை மந்திரம் ஓதினர்.

இந்தியப் பிரதமர் நேரு மறைவுக்குப் பின், லால் பஹாதுர் சாஸ்த்ரியை ஒரு அரசியல் சக்கிர வியூகத்தில் சிக்கவைத்து … சிரிமாவோ அம்மையார் ஒரு ஒப்பந்தமிட்டு, சுமார் 20 லட்சம் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப சம்மதிக்கவைத்தார்.

இதற்கு சீனா என்ற பூச்சாண்டி உதவியது.

1965ல், சீனாவிடம் தோற்ற இந்தியாவை தாங்களும் தோற்கடிப்போமென பாகிஸ்தான் கிளம்பிற்று.

அப்போது, பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியான [இன்றைய வங்கதேசம்] செல்லும் வழியில் பாகிஸ்தானின் விமானப்படைக்கு பெட்ரோல் தந்துதவிய சிங்காரி வேறு யாருமல்ல, சிரிமாவொ தான்!

சோம்பேரி சிங்களவர்களுக்கு வாக்குறுதிகளை மட்டுமே வாரி வழங்கி, அரசியல் ஆதாயங்களுக்காகப் பிழிந்தெடுத்த சிரிமாவோவுக்கு எதிராக 1971ல் பலத்த எதிர்ப்பு ஒன்று கிளம்பியது. அதற்குத் தலைமை தாங்கியவர் – ரோஹண விஜயவீரா! அவரது அமைப்பின் பெயர் ஜனதா விமுக்தி பெரமுனா [மக்கள் விடுதலை முன்னணி].

தாம் ஒரு ஷே குவார போன்ற கம்யூனிஸ்டு எனத் தம்மை வருணித்துக் கோண்ட விஜயவீரா இலங்கையில் ஆயுதப் புரட்சிக் கலகத்தை உருவாக்கியபோது … சிரிமாவோவின் ஆட்சி சந்தி சிரிக்காதிருக்க உதவியது இந்திரா காந்தி அம்மையார்.

இந்திய இராணுவம் இலங்கைக்குள் புகுந்து விளையாடி … சிங்களக் கிளர்ச்சியாளர்களை வேட்டையாடி … சிரிமாவொவின் அரசைக் காப்பாற்றியது.

சில மாதங்களுள் இந்திரா அம்மையார் வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கித் தர உதவியபோது … பாக் போர் விமானங்கள் அதே கொழும்பு நகரில் சகாய விலையில் பெட்ரோல் பிடித்துக் கொள்ள உதவிய உபகாரி உத்தண்டிப் பெண் – சந்தேகமே இல்லை – அதே சிரிமாவோ தான்!

[குறிப்பு: விஜயவீரா … சோவியத் ஐக்கியத்தின் தலை நகர் மாஸ்கோவில் – பாட்ரிஸ் லுமும்பா பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். அரசியல் ரீதியாக, ஸ்ரீமாவோவை அதிகமாக எதிர்த்த அவரைத் தன் பக்கம் இழுத்த அரசியல் “புத்திசாலிப் புண்ணியவான்” ஜெயவர்த்தன. ஜெயவர்த்தன-ராஜீவ் ஒப்பந்தத்திற்கு சதிக் கருத்து வழங்கியதே விஜயவீராதான் என நம்புபவர்கள் பலருண்டு. அந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, முதலில் இந்தியா புலிகளின் எதிரி என்ற நிலையை ஒரு புறம் உருவாக்கி, அந்தக் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க சிங்கள அரசியல் ஜோக்கர் ப்ரேமதாசாவைத் தூண்டிய அறிவாளி தான் விஜயவீரா என பல இந்திய உளவுத் துறை அதிகாரிகள் நம்புகிறார்கள். ஒரு புறம் புலிகளைத் தூண்டி அவர்களது கூற்றிலும் வாதங்களிலும் நியாயமிருப்பதாக ஒரு சிலரை நம்பவைத்த விஜயவீரா, தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை விரைவில் உயர்த்திப் பிடித்து – மீண்டும் அரசியல் ஆதாயம் தேட எண்ணிய நிலையில் – பண்டாவுக்கு ஏற்பட்ட நிலையை – சிரிமாவோவின் மகள் சந்திரிக்காவின் கணவரும் நடிகரும் ஆன குமரதுங்க [ஒரு அரசியல் அப்பாவி] ஏற்படுத்தி அவரைச் சுட்டுக் கொன்ற சதித் திட்டத்தில் விஜயவீராவுக்கும் பங்குண்டு என ஆணித்தரமாக, கொழும்பு நகரில் நம்புபவர்கள் பலர் உண்டு.

குமரதுங்க கொல்லப்பட்ட அனுதாப மேட்டரைப் பயன்படுத்தி சந்திரிக்கா ஆட்சியைப் பிடித்தார். குமரதுங்க தமிழனுக்கு வக்காலத்து வாங்க முற்பட்டதை அவரே பல சந்திப்புக்களின் போது நான் உணர்ந்தேன். அது சந்திரிக்காவுக்குப் பிடிக்காததையும் பார்க்க முடிந்தது. இந்த நிகழ்வுகள் சென்னையின் வுட்லேன்ட்ஸ் ஹோட்டலில் அரங்கேறின! இராணுவத்தால் விஜயவீரா கொல்லப்பட்டதிலும் அவரது இரகசிய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதிலும் உள்ள பல்வேறு மர்மங்கள் பற்றி நான் அறிந்திருந்தாலும், அதெல்லாம் இப்போது நமக்குத் தேவை இல்லை. ஆனால், விஜயவீராவை ஒரு புறம் தமிழர் எதிர்ப்பு பேச வைத்து, மறு புறம் புலிகளுக்கு உதவத் தூண்டி, பின்பு அதன் ஏமாற்றத்தை உணர்ந்த நிலையில் ஜ.வி.பெ அமைப்பு சிங்களவர்களை ஒரு வித காழ்ப்புணர்வில் வேட்டையாடியதைப் பயன்படுத்தி இதை எல்லாம் – சோம்பேறி சிங்களவர்களை இந்தியாவுக்கெதிராகத் தூண்ட அதே சிங்கள அரசியல்வாதிகள் பயன்படுத்தினர் என்பதையும், அதற்கு சீனாவும் பாகிஸ்தானும் துணை போயின என்பதும் நமக்கு நினைவிருந்தால் போதும்.]

தமிழருக்கு எதிரி என தங்களைக் காட்டிக் கொண்ட சிரிமாவோவுக்கு உதவிய இந்திரா அம்மையாரை நெருங்க விரும்பாத தமிழ் தேசியக் கட்சித் தலைவர் செல்வா … செய்வதறியாமல் தவிக்கையில் … அக்காலத்துத் தமிழ் இளைஞர்களான தங்கதுரை போன்றவர்கள் ஆயுதப் போர் ஒன்றே வழி எனக் கருதி … இஸ்ரேல் நாட்டினருடன் தொடர்பு கொள்ள முற்பட்டனர்.

இதற்கு ஒரு சிறிய கும்பல் உதவ முன்வந்தது. அதற்கு புதிய தமிழ் புலிகள் [Tamil New Tigers – TNT] எனப் பெயரிடப்பட்டது.

இதற்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் பத்குண ராஜா, பத்ம நாதன் என்ற ஒரு சில தமிழ் பள்ளி ஆசிரியர்கள், ரேடியோ மெக்கனிக்குகள்.

“படைபலத் தளபதிகள்” – செட்டி தனபாலசிங்கம், பிரபாகரன் ஆகியோர்.

செட்டி, பல முறை சிறை சென்ற குற்றவாளி.

அவனது உதவியளராகப் பிரபாகரன் “போராளி” ஆன “தம்பி” பிரபா, தன்னை சுதந்திர வீரனாகத் தூண்டியது க்ளின்ட் ஈஸ்டுவுட் என்ற ஹாலிவுட் நடிகரின் படங்கள் எனப் பல முறை பேட்டிகளில் கூறியவர்.

செட்டி, யாரால் காட்டிக் கொடுக்கப்பட்டு இலங்கைப் படையிடம் மாட்டிக் கொண்டு கொல்லப்பட்டார் என்ற விடுகதைக்குள் போகாமல் … டி என் டி எனப் பெயர் பெற்ற அமைப்பு பற்றிக் கொஞ்சம் சொல்வோம்.

பொதுவாக, டி என் டி என்றால் Trinitrotoluene என்ற வெடி மருந்து என உலகிலுள்ள அனைத்து விஷயமறிந்தவர்களுக்கும் தெரியும். கொஞ்சம் பயம் ஏற்படும். ஆதலால்தான் அந்த இயக்கத்திற்கு டி என் டி எனப் பெயர் சூட்டப்பட்டது.

“புலிப்படை” எனப் பிரபலமடைந்த இந்த அமைப்பின் கைங்கரியத்தினால் 1974 முதல் யாழ் நகரில் பல குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

SLFP கட்சிப் பிரமுகரும் யாழ் நகர மேயரும் ஆன அல்ஃப்ரெட் துரையப்பா போன்ற மிதவாத அரசியல் தலைவர்கள் சாம்பல் சாம்பிள்கள் ஆனார்கள்.

பயங்கரவாதம் தமிழர்களுக்கு ஒரு தக்க ஆயுதம் என தோன்றத் துவங்கியது.

பல கூட்டுறவு வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்தக் கொள்ளைகள் திட்டமிடப்பட்டது … புலிகள் தலைவர் பிரபாகரனால்.

அக்காலகட்டத்தில், கொள்ளை நடந்தவுடன் அவர் இந்தியா தப்பி விடுவதும், ஆனால் அச்செயலில் ஈடுபட்டவர்கள் இலங்கைக் காவல் துறையிடம் தவறாமல் சிக்கிவிடுவதும் ஒரு சிறு தொடர்கதை.

1976ல் உமா மஹேசுவரன் என்ற இளைஞர் [கொழும்பில் அரசுப் பணியில் இருந்தவர்] புலிகள் இயக்கத்திற்கு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனப் பெயர் மாற்றம் செய்து அதன் தலைவரானார்.

பிரபாகரன் அதன் படைத் தளபதி என அறிவிக்கப்பட்டார்.

தமிழ்ப் பிரிவினைவாதத்தில் அரசியல் ஆதாயம் இருப்பதை உணர்ந்த செல்வா போன்றவர்கள் 1976 ல், தமிழர் ஐய்க்கிய விடுதலை முன்னணி [Tamil United Liberation Front – TULF] என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினர்.

செல்வாவின் மறைவுக்குப் பின் அப்பப் பிள்ளை அமிர்தலிங்கம் என்ற வழக்கறிஞர் – அதன் தலைவராகி – 1977 இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்களின்போது தனி தமிழ் ஈழம் என்ற கோஷத்தை முன்வைத்து 19 தொகுதிகளில் தனது கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தினார்.

தேர்தல்கள் ஐ. நா. மேற்பார்வையில் நடந்தது.

இலங்கை அரசின் தேர்தல் கமிஷன் 18 த ஐ வி மு வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தது.

சுருக்கமாகச் சொன்னால் – அனைத்துலக நாடுகளும் தமிழர்களும் 1997லேயே தனி ஈழம் என்ற கொள்கையை சொல்லளவில் ஏற்றனர்.

அந்தத் தேர்தல்களின்போது, இலங்கை சுதந்திரக் கட்சி படு தோல்வி அடைந்து … 3வது இடத்திற்கு கீழிறக்கப்படவே … அமிர்தலிங்கம் எதிர் கட்சித் தலைவரானார்.

தனது அரசியல் ஆதாயத்திற்காக – அதற்குள் தமிழ் ஈழ விடுதலிப் புலிகள் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிரபாகரனை அவர் பயன்படுத்த ஆரம்பித்தார்.

ஈழம் கிடைக்கும் எந்த அறிகுறியும் தென்படாததால், புலிகளின் சில தலைவர்கள் வன்முறையில் இறங்கினர்.

அதனால் அந்தக் குழு பல பிரிவுகளைச் சந்தித்தது.

உமா மஹேசுவரன், தங்கதுரை, பத்மநாபா, சபாரத்தினம், யோகேந்த்ரன் என்ற குட்டிமணி, தம்பாப்பிள்ளை மஹேசுவரன், போன்றவர்கள் தனித்தனிக் குழுக்களை ஆரம்பித்தனர்.

1980ல் இந்திய அரசியலில் ஜனதாக் கட்சி மண்ணைக் கவ்வ … இந்திரா காந்தி அம்மையார் … அப்போதுள்ள பனிப்போரின் இடது கேந்திரங்களின் ஒன்றான சோவியத் ஐக்கியத்தின் ஆலோசனையின் பெயரில் இலங்கை அரசியலில் மறைமுகமாகத் தலையிட முடிவெடுத்தார் … சில குழுக்களுக்கு ஆயுதங்கள் … பண உதவிகள் என்ற அளவில் பேச ஆரம்பித்தார்.

1981ல் எந்த இயக்கத்திலும் இல்லத ஒரு விசித்திர நிலையில் இருந்த பிரபாகரனை “வழிக்குக் கொண்டுவர” ஆண்டன் பாலசிங்கம் என்ற ஒரு முன்னாள் ப்ரிட்டிஷ் அரசின் சிப்பந்தி பாரதம் வந்து குழுக்களுடன் பேச ஆரம்பித்தார்.

இதை உணர்ந்த சில இந்தியாவின் அதி தீவிர இடது சாரி அமைப்புக்கள் [பொதுவாக நக்சலைட்டுக்கள் என அழைக்கப்படுபவர்கள்] ஒரு புறமும், அதி தீவிர வலது சாரித் தீவிரவாத தத்துவங்களை உதிர்க்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற சிலரும் இந்தச் சுதந்திரப் போரைக் 1981ல் கைப்பற்ற எண்ணினர்.

“இந்தப் போர் சீரயஸான ஒன்றா” என அறிய ஒரு இளம், கிறுக்குத் தனமான பத்திரிக்கையாளனை இரு சாராரும் பணித்தன.

அவனது பெயர் தி சு வெ ஹரி என்கிற TSV Hari.

பாலசிங்கத்தைச் சந்திக்க சுப்பு என்ற அக்காலத்து தி மு க அரசியல்வாதியின் எம் எல் ஏ விடுதியின் அறை எண் 77ல் ஏற்பாடானது.

இலங்கயின் சிங்களப் பிரிவு அமெரிக்கா மற்றும் சீனாவின் அடிமைகள். அமிர்தலிங்கம், நீலம் திருச்செல்வன் போன்ற இலங்கையின் தமிழர் பகுதி மிதவாத அரசியல்வாதிகளும் அமெரிக்காவிடம் சோரம் போனவர்கள். இந்தியா சோவியத் ஐக்கியத்தின் ஜால்ரா. இதில் எந்த வகுப்பு எதற்காக, தனி ஈழம் என்ற நாடு உருவாக உதவும் என்ற ரீதியில் சுமார் 3 மணி நேரம் விவாதம் நடந்தது.

அந்த விவாதத்தின்போது உடனிருந்த இடது சாரித் தீவிரவாதம் பேசிய ஒரு வழக்கறிஞர் இன்னமும் தமிழகத்தில் தான் வாழ்கிறார்.

அந்தச் சந்திப்பின்போது தேனீர் வாங்கி வந்தவர் – பிரபாகரன்.

“மக்களுக்காக உழைக்கும் செங்கப்பூர் போன்ற அரசியல், பொருளாதாரக் கொள்கையுள்ள ஒரு சர்வாதிகார இடது சாரி ஆட்சியை புலிகள் இயக்கத் தலைமை நிறுவும்,” என பாலசிங்கம் கூறுகையில், நான் – நீங்கள் இடது சாரிச் சிந்தனையாளர் என இனியாவது உளராதீர்கள் – ஏனெனில் நீர் ஒரு ஃப்ராட்! சிங்கப்பூர் ஒட்டுமொத்த முதலாளித்துவ நாட்டின் ஆசியப் பிரதி நிதி நாடு. அதன் பொருளாதாரக் கொள்கையுடன் ஒரு சோஷலிச நாட்டை உருவாக்குவேன் என்ற பிணாத்தலால் … நீங்கள் யாருக்கோ உளவாளி எனத் தெரிகிறது. ப்ரிட்டிஷ் அரசில் பணி புரிந்த நீங்கள் அந்த நாட்டின் உளவாளியா?” எனக் கேட்டேன்.

பேட்டியை வெளியிட வேண்டாம் என பாலசிங்கத்தின் வேண்டுகோளை – சுப்பு அவர்களும் வழிமொழிய … அந்த அசிங்கம் தவிர்க்கப்பட்டது.

இடது வலது ஆகிய இரு சாராரிடமும் – இந்த நிலையில் இந்த தமிழ் ஈழச் சுதந்திரப் போரில் பல நியாயங்கள் இருந்தும் இது இந்த வழியில் முன்னேறினால் அதோகதியை அடையும் எனக் கூறினேன்.

வலது சாரிகள் ஒதுங்கிக் கொண்டனர்.

இடது சாரிகள் … கொஞ்சம் ஜாக்கிரதையாக புலிகளுடன் உறவு கொண்டனர்.

புலிகளின் அரசியலைத் தாக்கி எழுத ஆரம்பித்த என்னை இன்று இலங்கை அரசிடம் மாட்டிக்கொண்டுள்ள பேபி சுப்பிரமணியன் சுப்புவின் அறைக்கு வெளியே ஒரு முறை தட்டிக் கேட்க முற்பட்டபோது, மது அருந்தி இருந்த நான், அவரையும், பிரபாகரனையும் அறைந்தேன்.

சுவரில் மூட்டைப் பூச்சியைத் தேய்ப்பதுபோலத் தேய்த்து விடுவேன், என உரக்கக் கத்திய என்னை நெடுமாறன் அண்ணாதான் விலகிச் செல்லப் பணித்தார்.

உமா-பிரபா ஆகிய இருவர் ஒரு பெண் விஷயத் தகராரின் பெயரில் ஒருவரை ஒருவர் சென்னைப் பாண்டி பஜாரில் சுட்டுக்கொண்டனர்.

கைதாயினர்.

பிரபாவின் கைரேகைகளைத் தமிழகக் காவல் துறை முதல் முறையாகப் பதிவு செய்தது.

1983ல் புலிகள் இயக்கம் 13 சிங்கள இராணுவத்தின்ரைக் கொல்ல … அதைப் பயன்படுத்தி ஜெயவர்த்தன அரசு … தமிழர்கள் கொழும்பில் வேட்டையாட வழிவகுத்தது.

அந்தக் காலகட்டத்தில் புது டெல்லியில் அணி சேரா நாடுகளின் மாநாடு நடந்தது.

உமா மஹேசுவரன் ஈழ வரலாற்றையும் அதன் சுதந்திரத்தின் தேவையையும் அணி சேரா நாடுகளின் தலைவர்களிடம் அளிக்க என்னை புது டெல்லி அனுப்பினார்.

“தற்போது கொஞ்சம் பண முடை … ஆனால் … நீங்கள் பணியில் இறங்குங்கள் … விரைவில் பணம் அனுப்புகிறேன்,” என்றார்.

கடும் குளிரில் டெல்லியில் வினியோகத்தில் இறங்கிய எனக்குப் பணம் வரவில்லை.

உமாவை அவரது இரகசியத் தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றேன் … இயலவில்லை.

இறுதி 600 ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் … ஹோட்டல் அறையைக் காலி செய்து … அப்போது தி மு க வின் மா நிலங்கள் அவை உறுபினராக இருந்த வை கோ அவர்களின் அறைக்கு – உதவி கேட்டுச் சென்றேன்.

உமாவுடனான தனது பகையை வெளிப்படுத்திய வை கோ என்னை “வெளியே செல்” என்றார்.

சத்தம்போடாமல் வெளியேறிய நான் … பாலம் விமான நிலையத்தின் அருகே ஒரு இரவு சிற்றுண்டி விடுதியில், குளிருக்காக ஒரு கம்பிளியைப் போர்துக்கொண்டு தேனீர் அருந்த ஒதுங்கினேன்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு பெரிய போலீஸ் வண்டியில்ருந்து சில வீரர்கள் இறங்கி … தேனீர் அருந்த அமர்ந்தனர்.

மைக்கில் … ஹிந்தியில் … எனது பெயர் … ஊர் … தோற்றம் … எல்லாம் வருணிக்கப்படுவதை கேட்டேன்.

“இவன் இந்திய ஒருமைப் பாட்டிற்கு எதிராகச் செயல்படும் தமிழ்த் தீவிர வாதி,” என்ற ரீதியில் அறிவுப்பு.

சரளமான ஹிந்தியில், நான் என்னையே ஹிந்தியில் தமாஷாக காவல் துறையினரிடம் ஏசினேன்.

“ஏதோ பைத்தியக்காரன்! கிடக்கிறான், விடுங்கள்!”

இது எனக்கு அளிக்கப்பட்ட அந்த ஹிந்தி பேசிய காவல் துறையினரின் அட்வைஸ்!

பதிலுக்கு, “ஏதாவது பயங்கர ஆயுதம் வைத்திருக்கப்போகிறான். பிடிபட்டால் ஜாக்கிரதையாக இருக்கும்படி மைக்கில் சொல்லுங்கள்!” என்றேன்.

“எங்களுக்கு எதுக்கு வம்பு? நான்க வேலையை முடிச்சு ஆக்ரா நகருக்குக் கிளம்பிட்டோம். வேற எங்கேயும் இப்போ டீ கிடைக்காது … அதனால் தான்…” என்ற ரீதியில் அவர்கள் சொல்ல, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த எண்ணினேன்.

“ஊருக்குப் பொகணும்… சில்லறைத் தட்டுப்பாடு. இடம் குடுத்தா … ஆக்ராவுக்குப் பக்கத்தில்…”

இப்படித் தலை சொறிந்தவாறே இழுத்த என்னை வண்டியில் பயணிக்க காவல் துறையினர் அனுமதித்தனர்.

சென்னை வந்தவுடன் என்னை புது டெல்லியில் மாட்டவிட்டதன் காரணத்தை உமாவிடம் கேட்டபோது…. “நான்க பயங்கரவாதிங்கதான். ஆனா நீங்க எங்களுக்கெல்லாம் குரு. பணம் குடுக்காத விஷயத்தில் ஏதேனும் வில்லங்கக் காரணமிருக்கும் என உணர்ந்து தப்பி விடுவீர்கள் என எண்ணித் தான் உங்களது தொலைத் தொடர்பை ஏற்கவில்லை,” என்றார்.

இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்திருந்த அமிர்தலிங்கத்தை ஒரு பொதுக்கூட்டத்தில் தாக்கி பேசியிருந்தேன்.

அவர் என்னை சென்னை அரசினர் விருந்தினர் மாளிகையில் சந்தித்தார்.

“என்னைத் தமிழ்த் துரோகி என்றீராமே!”

இப்படிக் கேட்ட அவரிடம் ஒரு சிறு விவாதம் செய்தேன்.

அதில் எனது வாதத்தின் சாராம்சம்: “1977ல் தனி ஈழம் என்ற கோஷத்தை முன்வைத்து 19 தொகுதிகளில் 18ல் வென்ற நீங்கள் – ஜெயவர்த்தனவிடம் ஈழத்தின் எல்லைகளை குறிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தி, ஐ. நா. வில் தனி இருக்கை கேட்டு, இந்தியா போன்ற நாடுகளில் தூதரகம் என்றெல்லாம் துவங்கி இருந்தால், இதற்குள் தனி ஈழம் கிடைத்திரா விட்டாலும், தமிழர்கள் கொல்லப்படாமல் இருக்க ஜெயவர்த்தனாவே வழி வகுத்திருப்பாரே! இதைச் செய்யாத நீங்கள், தமிழ்த் துரோகியா, முட்டாளா?”

அமிர்தலிங்கம் குலுங்கிக் குலுங்கி அழுது, “இது கூட எனக்குத் தோன்றாமல் போனதே! நான் முட்டாள், தம்பி, கடைந்தெடுத்த முட்டாள்,” என்றார். பேட்டியப் பிரசுரிக்க வேண்டாம் என்றார்.

இந்திய அரசியல்வாதிகளுக்கு இதில் ஒரு ருசி அதிகமாயிற்று.

தனக்கு மட்டுமே தமிழ் ஈழம் என்ற நாடு அடிமையாய் இருக்கவேண்டுமென பிரபா அடம்பிடிக்கத் துவங்கும் முன்னர் – இந்திய அரசு முக்கிய ஈழக் குழுக்களை ஈழ தேசிய விடுலை முன்னணி என்ற ஒன்று சேர்த்தது.

அதன் புண்ணியத்தில் மற்ற குழுக்களின் இரகசியங்களை உணர்ந்த பிரபாகரன் – அவற்றுள். தமிழ் ஈழ விடுதலை இயக்கம் [TELO] தலைவர் சபாரத்தினம் போன்றவர்களை வேட்டையாடிக் கொல்ல ஏற்பாடு செய்தார்.

திரிகோண மலையில் செயல்படும் அமெரிக்காவின் உளவு கோபுரத்தை அழிக்க ராஜீவுக்கு சோவியத் ஐக்கியக் குடியரசுகளின் தலைமைக்காக இயங்கிய கே ஜி பி என்ற உளவு ஸ்தாபனம் ஐடியா வழங்க … அவரும் … அதிகம் யோசியாமல் 1987, இலங்கையின் ஜெயவர்த்தனா அரசுடன் ஒப்பந்தமிட்டு இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பி வைத்தார்.

அந்த ஒப்பந்தத்தின் சாரம்சம்:தமிழர்களுக்கு சிங்கள அரசு – இந்தியாவில் உள்ளது போன்ற மாநிலங்களுக்குள்ள ஆட்சி உரிமைகளை வழங்கும்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் வடக்கு, வடக்கிழக்குப் பகுதிகளை ஒரே மாகாணமாக என்றுமே இலங்கை அரசு வைத்துப் பேணும்.

இதற்கெல்லாம் பதில் உபகாரமாக, இலங்கையின் பாதுகாப்புத் தேவைகளை இந்தியா தனது செலவில் கவனித்துக் கொள்ளும்.

[குறிப்பு: அப்படிக் கவனிப்பதால், திரிகோண மலை இந்தியாவசம் … அதாவது சோவியத் வசம் வந்துவிடும் என கொக்கு தலையில் வெண்ணை என்ற ரீதியில் ராஜீவுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டது. ஏற்கனவே, போஃபர்ஸ் பீரங்கி வாங்கும் விஷயத்தில் ஸ்வீடன் நாட்டுடன் ராஜீவ் வியாபாரம் பேசிய விஷயத்தை சோவியத் உளவாளிகள் பத்திரிக்கையாளர்களிடம் அளித்து அவரது ஆட்சி கவிழ்க்கத் தயாராகி இருந்தனர். லஞ்சம் சோனியாவின் உறவினர் க்வாத்ரோக்கியின் கைக்குப் போயிற்று. இந்தியப் படையினர் தமிழச்சிகளிடம் தவறாக நடந்து கொண்ட விஷயத்தை பத்திரிக்கைகளில் பத்தி பத்தியாக பற்ற வைத்த சோவியத் “அன்பர்கள்” சோனியா மூலமாக – புலிகளை விட்டு ராஜீவை மாட்டிக் கொள்ளாமல் கொல்லுங்கள் … என சோவியத் ஐக்கிய உளவாளிகள் திட்டம் தீட்டி செயலில் இறங்கிய விஷமத்தை உணர்ந்த மேற்கத்திய நாடுகளின் அரசுகள் – ஏற்கனவே பிடிவாதம் பிடிக்கும் பிரபாகரனை கொஞ்சம் கொம்பு சீவி விட்டனர்.

பிரபாகரன் இந்திய அமைதி ஒப்பந்தத்தை ஏற்காமல் இந்தியப் படையுடன் தனது தோழர்களைப் போராடப் பணித்தார்.

தங்களது எல்லா பலவீனங்களையும் அறிந்திருந்த தங்களிடம் பாடம் கற்ற மாணாக்கர்களிடம் இந்தியப் படை தோற்க வழி வகுத்தப் புண்ணியவான்கள் – ஒரு புறம் பிரபாகரன் – மறுபுறம் இலங்கையின் பிற்கால அதிபர் ப்ரேமதாஸா.

கொரில்லாத் தாக்குதல்களால் உயிரிழப்பு ஏற்பட்டபோதெல்லாம் வெகுண்ட இந்திய அமைதிப் படைத் தளபதிகளால் தங்கள் பக்க அத்துமீறல்களை அடக்க முடியவில்லை.

உண்மையில் பாகிஸ்தான் மற்றும் சோவியத் உளவாளியான சோனியா அம்மையாரின் உதவியுடன், போஃபர்ஸ் பீரங்கி ஊழல் இரகசியங்கள் வெளியே வராமல் இருக்கத் தக்க ரீதியில் ராஜீவைக் கொல்ல புலிகளை சோனியா அம்மையாரின் உத்திரவின் பெயரில் புலிகள் பணிக்கப்பட்டனர்.

ராஜீவ் ஃபணால்.

ராஜீவின் மரணத்தால் அரசியல் லாபமடைந்த சோனியா, வேறு ஒருவரைப் பிரதமாரக்கி – உண்மையில் இந்தியாவின் முடி சூடா அரசியானார்.

ராஜீவ் கொலையாளிகள் இன்றும் சிறையில் சொகுசு வாழ்வு வாழ்கிறார்கள்.

ஆயுள் தண்டனையை விட அதிகக் காலம் சிறையில் வாடி விட்டோம், எங்களுக்கு விடுதலை வேண்டுமென சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் கோரி வருகிறார்கள்.

மரண தண்டனை ஆயுள் தண்ட்னையாகக் குறைக்கப்பட்ட நளினியும் நளாயினி கணக்காக இதையே கோருகிறார்.

இந்திய தண்டனைச் சட்டத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு – அந்த தண்டனை நிறைவேற்றப்படாவிடில், 14 வருடங்கள் என்ற ஆயுள் தண்டனைக் காலக்கெடுவுக்குப் பிறகு [அதுவும் எங்கும் கூறப்படவில்லை] விடுதலை அளிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் சட்டத்தில் எழுதியிருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் ஒரு புறம் … மறுபுறம் ராஜீவின் மகள் பிரியங்கா வாத்ரா நளினியை எந்தவிதக் காரணமும் கூறாமல் திடீரென 2008ல் – முன்னாள் புலித் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கிற கர்னல் கருணாவுக்கு ஒரு இங்கிலாந்து நீதி மன்றத்தில் 9 மாதக் கடுங்காவல் தண்டனை விதித்த காலகட்டத்தில் சந்தித்தார்.

இந்தியப் பத்திரிக்கையாளர்கள் பலர் – ஆஹா … ராஜீவின் மகள் தந்தையின் கொலையாளியை பெரிய மனது பண்ணி மன்னித்துவிட்டார்! என்ற ரீதியில் வரிந்து கட்டிக் கொண்டு எழுதித் தள்ளினர்.

ஆறு மாதம் கழித்து … நான் தான் மன்னிக்கவே இல்லையே என்று ஒரு போடு போட்டார் பிரியங்கா!

பிறகு ஏன் நளினியைச் சந்தித்தீர்கள் என யாரும் கேட்கவில்லை.

நான் “பர்ஸனலாக” நளினியைச் சந்தித்தேன் என்று மட்டும் அம்மணி சொல்லிவைத்தார்.

தனது தந்தையைக் கொன்ற குற்றம் நிரூபணமான ஒருவரை ஏன் ஒரு பெண் ஒரே நாளில் சுமார் 5000 மைல்கள் பறந்து வந்து சந்தித்து, திரும்பிச் செல்லவேண்டும் … அதுவும் காரணமில்லாமல்?

தனது தந்தையைக் கொல்ல உதவியதாக ஒப்புக்கொண்ட பெண்ணிடம் இரகசியமாக அளவளாவ அப்படி என்ன பர்ஸனல் காரணம்?

மர்மமோ மர்மம்! இது வரை ப்ரியங்கா சொல்லவே இல்லை!

இந்தச் சந்திப்பு நிகழ்ந்து சில மாதங்களுள், தண்டனை நிறைவேறாமல் … கருணா இலங்கை திரும்பி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம். பி ஆகி … தமிழர்கள் மீது தாக்குதல்கள் துவங்கி … யாழில் சிங்களப்படையினரின் கொலைவெறி தாண்டவமாடி சுமார் 45000 அப்பாவித் தமிழர்கள் வேட்டையாடி, கற்பழித்துக் கொல்லப்பட்டனர்!

புலிகள் தான் வேட்டையாடப்பட்டனர் என இந்திய மக்களை நம்பவைத்து 2009 தேர்தலில் சோனியா வெற்றி பெற்றார்.

தன்னை இந்தியாவின் வருங்காலப் பிரபாகரனாகச் சித்தரித்துக்கொள்ளும் தொல் திர்மா வளவனின் கட்சியினர் காங்கிரஸ் காரர்களை சத்தியமூர்த்தி பவனில் மூர்க்கத் தனமாகத் தாக்கியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அதே காங்கிரஸ் தோழமைக் கட்சியெனக் கூறி அவரைச் சிதம்பரம் தொகுதியில் ஜெயிக்க வைத்தது!

மே மாதம் 19 அன்று பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறி ஒரு சடலத்தை தொலைக்காட்சிகளில் பரேடு எடுத்தனர்.

அந்தச் சடலம் பிரபாகரனுடையது தான் என நிரூபிக்க, கைரேகை ருசுக்களோ, டி என் ஏ ருசுக்களோ இது வரை அளிக்கப்படவில்லை!

பிரபாகரன் தப்பித்திருக்கலாம் எனக் கூறிய 2009 மே மாத ஹீரோ படைத் தளபதி ஃபோன்ஸேக்கா சுமார் 3 வருடம் சிறையில் ஜீரோ ஆன மர்மத்திற்கும், சம்பந்தமில்லை என இனியும் கூறினால் யார் நம்புவது?

தன்னை அடுத்த பிரபாகரனாகச் சித்தரித்து, காங்கிரஸ் தொண்டர்களை சத்திய மூர்த்தி பவனில் அடித்து நொறுக்கிய திருமா இன்னமும் ஐ.மு.கூ வின் அங்கம்! இதை எல்லாம் பார்த்த பின்பும் தமிழகத்திலும் மத்தியிலும் ஈழ விஷயத்தில் நடப்பதெல்லாம், தமிழ் பேசும் நல்லுலக மக்களுக்கு நல்லது செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்றெலாம் நினைக்க நாம் என்ன கூமுட்டைகளா?

இதற்கெல்லாம், யார், எப்போது விடை அளிக்கப்போகிறார்கள்?

error: Content is protected !!