இந்தக் கால இளைஞர்களின் “மானே தேனே பேயே”!- புதிய ஆல்பம்!

இந்தக் கால இளைஞர்களின்  “மானே தேனே பேயே”!- புதிய ஆல்பம்!

கல்சன் மூவீஸ்(பி)லிட் பட நிறுவனம் தயாரிக்கும் படம் மானே “தேனே பேயே” இந்த நிறுவனம் தற்போது பென்சில் என்ற படத்தையும், அருவி என்ற படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. “ மானே தேனே பேயே” படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுபஸ்ரீகங்குலி நடிக்கிறார். இவர் பெங்கால் மொழியில் 15 படங்களுக்கு மேல் நடித்து முதல்தர கதாநாயகியாக உள்ளார். மற்றும் டேனியல்பாலாஜி, சஞ்சனா, செண்ட்ராயன், செவ்வாளை, மயில்சாமி, மீராகிருஷ்ணன், மதுமிதா, அர்ஜுனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.எழுதி இயக்கும் கிருஷ்ணாவிடம் படம் பற்றி கேட்டோம்…
ஜில்லுன்னு ஒரு காதல், காதல் கதையாக உருவாக்கினேன். நெடுஞ்சாலை ஆக்ஷன் படமாக உருவாக்கினேன். “ மானே தேனே பேயே ” படம் வேறு மாதிரியான கதைக் களத்தை மையப் படுத்தி உருவாகுகிறோம்.ஆரி – சாண்டி என்றழைக்கப் படுகின்ற சந்தானம் என்கிற பெயரில் சாப்ட்வேர் இளைஞராக நடிக்கிறார். டேனியல்பாலாஜி இதுவரை ஏற்றிராத வேடமேற்று நடிக்கிறார். இது தனது வாழ்க்கைக்கு கிடைத்த சவாலான வேடம் என்கிறார் டேனியல்பாலாஜி.தொடர்ந்து 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று ஒரே கட்டத்தில் முடிவடைகிறது.சம காலத்து இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக “மானே தேனே பேயே” உருவாகி வருகிறது என்றார் இயக்குனர் கிருஷ்ணா.

error: Content is protected !!