’இட்லி’யில் பாட்டிகளாகும் கோவை சரளா, சரண்யா, மற்றும் கல்பனா! -ஆல்பம்

’இட்லி’யில் பாட்டிகளாகும் கோவை சரளா, சரண்யா, மற்றும் கல்பனா! -ஆல்பம்

சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா, மனோபாலா, சுவாமிநாதன், சித்ரா லட்சுமணன், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு உட்பட பலர் நடிக்கும் படம் ‘இட்லி’.இன்றைய நவீன டெக்னாலஜி பற்றி தெரியாத பாட்டிகளாக சரண்யா, கோவை சரளா, கல்பனா ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களின் பேத்திக்கு திடீரென்று ஒரு பிரச்னை வருகிறது. அதிலிருந்து அவரை மீட்க, பாட்டிகள் விபரீத முடிவு எடுக்கின்றனர்.

அதிலும் தங்களுக்குத் தெரிந்த டெக்னாலஜி மூலம் பேத்தியை எப்படி காப்பாற்றுகின்றனர் என்பது தான் ‘இட்லி’ திரைப்படத்தின் கதை. சரண்யா பாட்டு டீச்சராகவும், கோவை சரளா நூலகராகவும், கல்பனா அழகுக்கலை நிபுணராகவும் நடித்துள்ளனர். இவர்களின் பேத்தியாக ‘சலீம்’ நாயகி அஸ்கிதா நடிக்கிறார். இது காமெடி படம் என்பதால், காமெடி நடிகர்கள் பட்டாளமே நடிக்கின்றது.

மூன்று பாட்டிகளும் சேர்ந்து பி.சி.சி வங்கியில் கொள்ளையடிக்கும் காட்சிகளும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் நிச்சயம் ரசிகர்களை சிரிக்கவைக்கும் என இப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!