ஆதரவற்ற நலிந்த குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் “மைம்

ஆதரவற்ற நலிந்த குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் “மைம்

“G மைம்” ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர் மைம் கோபி . மைம் கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை வளரும் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அதில் வெற்றியையும் கண்டு வருபவர் .சினிமாவுக்குரிய நடிப்பு பயிற்ச்சியையும் கற்ப்பித்து வருபவர் .தான் மட்டுமே சமுதாயத்தில் மேலோங்கி இருக்க வேண்டும் என்ற பெரும்பாலான மனிதர்களுக்கு மத்தியில் ஆதரவற்ற ,நலிந்த ஊனமுற்ற குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் கடந்த இரண்டு வருடமாக “மா ” என்ற நிகழ்ச்சியை நடத்தி இந்த தெய்வ குழ்ந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார் .
maa
இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு துறைகளில் பணியாற்ற்றுபவர்கள் இக்குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .சென்னை காமராஜர் அரங்கத்தில் நவம்பர் 16 தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரத்யேகமாக” மா “என்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது , இயக்குனர் பிரபு சாலமன் , பாண்டி ராஜ் , ரஞ்சித் ,பாலாஜி மோகன் , நடிகர் கார்த்தி, காளி , ஜான் விஜய் , அசோக் , கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . இவ்விழாவில் “அன்பு மலர் “இல்லத்தில் உள்ள 61 குழந்தைகளுக்கு ஒரு ஆண்டிற்கான கல்வித்தொகை வழங்கப்பட்டது ..

யாரேனும் இக்குழந்தைகளுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள

ஜி “மைம் ஸ்டுடியோ
மைம் கோபி -09884032100
அஜித் – 09841236904
கோம்ஸ் -09884500004

நிகழ்ச்சி ஆல்பம்:

error: Content is protected !!