அரிசி சேவை வரி ரத்து – பட்ஜெட்டில் சிதம்பரம் அறிவிப்பு!

அரிசி சேவை வரி ரத்து – பட்ஜெட்டில் சிதம்பரம் அறிவிப்பு!

வேளான் விளை பொருளான அரிசியை அப்பட்டியலிலிருந்து நீக்கி அதன் மீது சேவை வரி விதித்து உத்தரவிட்டிருந்தது மத்திய அரசு. ஆனால் அதே சமயத்தில் மற்றொரு வேளான் விலை பொருளான கோதுமைக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.இதற்கு தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள், விவசாயிகள் மற்றும் நெல் வியாபாரிகள் ஆகியோரும் மத்திய அரசின் இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தினர்.இந்நிலையில், அரிசிக்கு சேவை வரி கிடையாது என்று ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.சேவை வரி விதிக்கும் வேளாண் பொருட்கள் பட்டியலில் இருந்து அரிசிக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
p chidambaram
நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளிக்கிடையே 2014-15-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் உரையை ப.சிதம்பரம் வாசித்தார்.அப்போது ,அடுத்துவரும் 30 ஆண்டுகளில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று நம்புகிறோம். நாட்டின் நிதிப் பற்றாக்குறை வரும் 3 ஆண்டுகளில் 3% ஆகக் கொண்டுவரப்படும். தற்போதைய பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, புதிய வரிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றார்.உணவு மற்றும் எரிபொருள் மானியத்திற்காக ரூ. 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்காக ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நாட்டில் 4 மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலைகள் அமைக்கப்படும். அதுபோல் 7 விமான நிலையங்களும் அமைக்கப்படும்.

நேரடி பண மானிய திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆதார் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. தொலைதொடர்புக்கான செயற்கைக்கோள் ஏவப்படும். முக்கிய சமூக நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வறுமை ஒழிப்பு அமைச்சகத்திற்கு ரூ. 6 ஆயிரம் கோடியும், கிராமப்புற வளர்ச்சி அமைச்சகத்திற்கு ரூ. 82 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படும்.

திட்ட செலவுக்கான இலக்கு 5.5 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ரூ. 8 லட்சம் கோடி விவசாயக்கடன் வழங்க இலக்கு. கடந்த நிதியாண்டில் ரூ. 57 ஆயிரம் கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. புதிதாக ரூ. 1252 கிளைகளை திறந்துள்ளது. 500 மெகா வாட் திறன்கொண்ட அதிவேக ஈணுலை கல்பாக்கத்தில் தயாராகும்.” என்றார்.

மேலும் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

* அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரி ரத்து செய்யப்படுகிறது.

* நெல்லுக்கான சேவை வரி முற்றிலும் நீக்கம்.

* மந்தமாக உள்ள வாகனத்துறைக்கு உற்பத்தி வரி குறைக்கப்படுகிறது.

* தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு புதிய வரிவதிப்புகள் ஏதும் இல்லை.

* மொபைல் சாதனங்களுக்கான உற்பத்தி வரி குறைப்பு.

* உற்பத்தி வரி 12 சதவிகித்தில் இருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* சிறிய ரக கார்கள், பைக் உற்பத்தி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக குறைப்பு.

* மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.
* எல்ஐசி புதிதாக 1,252 கிளைகளை திறந்துள்ளது.

* நடப்பு நிதியாண்டில் மொத்த திட்ட செலவினம் 5,55,322 கோடியாக இருக்கும்.

* வேளாண்துறைக்கு அடுத்த நிதியாண்டில் வங்கிகள் ரூ.8 லட்சம் கோடி கடன் அளிக்கும்.

* காப்பீட்டு சீர்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த இயலவில்லை.

* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டுகால சராசரி வளர்ச்சி 6.2 சதவீதம்.

* தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் (1999-2004) வளர்ச்சி விகிதம் 5.9 சதவீதம். !

* வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உதவியாக ரூ.1,200 கோடி வழங்கப்படும்.

* பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட கல்விக் கடனுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும்.

* பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்காக மகிளா வங்கி திறக்கப்பட்டுள்ளது.

* வரும் நிதியாண்டில் 8 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்க இலக்கு.

* நடப்பாண்டில் இலக்கை விஞ்சி 7 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன் அளிக்கப்பட்டுள்ளது.

* 500 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட அதிவேக ஈனுலை கல்பாக்கத்தில் தயாராகும்.

* நேரடி மானியத் திட்டத்தில் உள்ள குறைபாடு நீக்கப்பட்டு மீண்டும் நடைமுறைக்கு வரும்.

* நேரடி பண மானிய திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

* ஆதார் அட்டை திட்டத்தை முற்றிலும் செயல்படுத்த மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது.

* நாடு முழுவதும் இதுவரை 57 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

* உணவு, எரிபொருள் மானியங்களுக்கு 2,46,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

* பெண் குழந்தைகள், மகளிரின் பாதுகாப்பிற்கு அடுத்த நிதியாண்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

* செயற்கைக்கோள்கள் அனுப்புவதில் சுயசார்பு நிலையை அடைந்துள்ளோம்.

* ரயில்வேக்கான புதிய நிதி ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

* நாட்டில் 7 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

* 10 ஆண்டுகளுக்கு முன் சுகாதாரத்துறைக்கு 7,248 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* கடந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு 36,400 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறு குறு தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் தரப்பட்டுள்ளது.

* நாட்டில் 4 மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலைகள் தொடங்கப்படும்.

* மக்களின் ஆரோக்கியத்தை காக்க நவீன மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* அடுத்த நிதியாண்டில் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்களை ஏவ இந்தியா திட்டம்.

* செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தி்யாவும் இணைந்துள்ளது.

* மின்சார உற்பத்தி, கிராமப்புற சாலைகள் கட்டமைப்பு பிரமிக்கத்தக்க வகையில் உயர்வு.

* அரசு, செபி, ரிசர்வ் வங்கி இணைந்து ரூபாய் மதிப்பு சரிவை தடுத்துள்ளது.

* உணவு பணவீக்கம் குறைந்திருந்தாலும் அது தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளது.

* ஜனவரி மாதம் வரை 296 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

* விவசாயத்துறையின் வளர்ச்சி பெருமைப்படும் வகையில் அதிகரித்துள்ளது.

* இந்திய ரூபாயின் மதிப்பு கடும் நெருக்கடிக்கு உள்ளானது.

* உணவு தானிய உற்பத்தி இதுவரை இல்லாத சாதனையாக 26 கோடி டன்னை எட்ட உள்ளது.

* இந்த நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 6.3 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

* சென்னை- பெங்களூருவை இணைக்கும் சரக்கு போக்குவரத்துக்கான ஆய்வுப்பணி நடக்கிறது.

* சர்வதேச பொருளாதார மந்த நிலையிலும், ஏற்றுமதியில் சாதனை புரிந்துள்ளோம்.

* எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கு பெரிய அளவில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

* சில ஆண்டுகளாக சவாலாக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

* இந்தியாவின் வளர்ச்சியை தரவரிசை நிறுவனங்கள் குறைத்து மதிப்பிட வாய்ப்பில்லை.

* பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு, ரிசர்வ் வங்கி மூலம் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

* நாட்டின் நிதிப்பற்றாக்குறை 4.6 சதவிகிதற்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

* சர்வதேச மந்தநிலையால் இந்தியா பாதிக்கப்படவில்லை

* மற்ற வளரும் நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.

* வளர்ந்து வரும் நாடுகளில் இருப்பதுபோன்ற பொருளாதார சூழலே இந்தியாவில் உள்ளது.

* அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பாவின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் இன்று அவர் தாக்கல் செய்த இடைக்கால பொதுபட்ஜெட் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவ்ர்,”பொருளாதார சரிவில் இருந்து இந்தியாவை இருந்து மீட்டுள்ளோம், நிதிப்பற்றாக்குறை, பணவீக்கம் குறைந்துள்ளது. வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது., ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. வாகனங்களுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது, சமூக நலத்திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, பொருளாதாரத்தை மேம்படுதத பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்ததைவிட கடைசி காலாண்டில் வளர்ச்சி அதிகரிக்கும், 2014 – 15 ல் வளர்ச்சி 6 சதவிகிதத்தை எட்டும்பொதுவாக, கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டு, குறிப்பிடுவது வழக்கம். இம்முறை, கடந்த 10 ஆண்டுகளை பின்னோக்கி பார்த்து, நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை கூறி உள்ளோம். நாங்கள் என்ன செய்யப் போகிறோம், என்ன செய்திருக்கிறோம் என்பதை, சாதாரண மக்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பட்ஜெட் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். கடந்த ஆண்டுகளில், வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ஏற்றுமதியும் கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளது.” என்றார்.

error: Content is protected !!