அஜீத்தின் புனே TO சென்னை பைக் ட்ரிப்! மினி ஆல்பம்

அஜீத்தின் புனே TO சென்னை பைக் ட்ரிப்! மினி ஆல்பம்

பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தம் வகையில் அஜித் புனேவில் இருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்தார். புனேவில் இருந்து சென்னை இடையேயுள்ள 1,100 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 16 மணி நேரத்தில் கடந்து வந்தார்.இதற்காக அவர், ‘பி எம் டபிள்யூ கே 1300 எஸ்’ என்ற நவீன வசதிகளை கொண்ட மோட்டார் பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார். இந்த மோட்டார் பைக்கிலும், அவர் அணிந்து கொள்ளும் ஹெல்மெட்டிலும் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. அதோடு அந்த ஹெல்மெட்டில் ‘புளூ டூத்’ வசதியும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1ajith2_jpg_1621192g
நடிகர் அஜித், சர்வதேச அளவில் கார் மற்றும் மோட்டார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். தற்போது பந்தயங்களை தவிர்த்து விட்டு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தனது திரைப்படங்களின் மூலமாக தனது மோட்டார் பைக் ஓட்டும் சாகசத்தை அஜித் தனித்துக்கொள்ளவே செய்கிறார்.

இதற்கிடையில், தற்போது மக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அஜித், தனது மோட்டார் பைக் ஓட்டும் பழக்கத்தை பயன்படுத்துகிறார்.இதையொட்டி சந்தைக்கு புதிதாக எந்த பைக் வந்தாலும், தனது நண்பர்களான பைக் ரேஸர்களிடம் அதனைப் பற்றி கேட்டு ஆர்வமாக தெரிந்துக் கொள்வார்.
தற்போது புதிதாக ‘பி எம் டபிள்யூ கே 1300 எஸ்’ என்ற நவீன வசதிகளைக் கொண்ட பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார்.

இந்த நவீன மோட்டார் பைக்கில் அஜித்குமார் கடந்த மாதம் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் பைக்கிலேயே சென்னைக்கு திரும்பினார்.

அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்தின் ‘பேட்ஜ் ஒர்க்’ (இணைப்பு வேலை) மும்பையில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக அஜித்குமார் மும்பை சென்றார். மும்பையில், ‘ஆரம்பம்’ பட வேலையை முடித்துக்கொண்டு அங்கிருந்து மராட்டிய மாநிலம் புனே சென்று, ‘வீரம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அவருடைய மோட்டார் பைக் விமானம் மூலம் புனேக்கு கொண்டு வரப்பட்டது. புனேயில், ‘வீரம்’ படப்பிடிப்பு முடிந்ததும் அஜித்குமார் மீண்டும் தனது மோட்டார் பைக் மூலம் சென்னை பயணத்தை தொடங்கினார்.

நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அவர் மோட்டார் பைக்கில் சென்னைக்கு புறப்பட்டார். அவருடன் நண்பர் மனோகர் இன்னொரு மோட்டார் பைக்கில் வந்தார். வழியில், இருவரும் பெங்களூரில் 3 மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். பின்னர் அங்கிருந்து மோட்டார் பைக்கில் சென்னைக்கு புறப்பட்டார்கள்.

நேற்று அதிகாலை 2 மணிக்கு இருவரும் சென்னை வந்து சேர்ந்தார்கள். புனேயில் இருந்து 16 மணி நேரத்தில், மோட்டார் பைக்கிள் சென்னைக்கு வந்து சாதனை புரிந்து இருக்கிறார், அஜீத்குமார்.

புனேயில் இருந்து சென்னைக்கு மோட்டார் பைக் ஓட்டி வந்த அனுபவம் பற்றி நடிகர் அஜித்குமார் கூறுகையில், “டூ வீலர் ஓட்டுபவர்கள் தான் அதிக அளவில் விபத்தில் சிக்குகிறார்கள். குறிப்பாக, ஹெல்மெட் அணியாதவர்கள் விபத்தில் மரணம் அடைய நேர்கிறது. ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும், போக்குவரத்து விழிப்புணர்ச்சியையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவே நான் மோட்டார் பைக்கில் பயணம் மேற்கொள்கிறேன். புனேயில் இருந்து சென்னைக்கு மோட்டார் பைக் ஓட்டி வந்தது, ஒரு தியானம் போல் இருந்தது. ஒரு தவம் போல் இருந்தது.” என்றாராம்.

error: Content is protected !!