கொரோனா தடுப்பூசி தயாராவது எப்படி?: பிரதமர் மோடி நேரில் ஆய்வு- வீடியோ
பிரதமர் மோடி இன்று (28 ம் தேதி) சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறைகளை தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்ய குஜராத் மகாராஷ்டிரா, மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி முதலாவதாக, ஆமதாபாத்தின் அருகேயுள்ள சங்கோடர் தொழில் பூங்காவில் அமைந்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்து வரும் ஜைகோவ் – டி தடுப்பு மருந்து குறித்து மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்த மருந்து, தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனை யில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Visited the Zydus Biotech Park in Ahmedabad to know more about the indigenous DNA based vaccine being developed by Zydus Cadila. I compliment the team behind this effort for their work. Government of India is actively working with them to support them in this journey. pic.twitter.com/ZIZy9NSY3o
— Narendra Modi (@narendramodi) November 28, 2020
இதனை தொடர்ந்து, தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பாரத் பயோடெக் தயாரித்து வரும் கோவாக்சின் மருந்தை மோடி ஆய்வு செய்தார். இந்த மருந்து தற்போது 3ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.
பின்னர், மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்து வரும் தடுப்பு மருந்தை பிரதமர் ஆய்வு செய்தார். இந்த நிறுவனம் சர்வதேச மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.
அச்சமயம் இதுவரையிலான அவர்களது பரிசோதனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்காக விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். தடுப்பு மருந்தை துரிதமாக உருவாக்குவதற்காக இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்று கூறியுள்ளார்.