ஹர ஹர மஹாதேவகி – என்ற தலைப்பு ஏன்? – இயக்குநர் விளக்கம்!

ஹர ஹர மஹாதேவகி  – என்ற தலைப்பு ஏன்? – இயக்குநர் விளக்கம்!

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தை புதுமுக இயக்குனர் சந்தோஷ் க.ஜெயகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, இந்த காலத்து இளைஞர்  களுக்கு பிடித்த வகையில் ஹர ஹர மஹாதேவகி படம் உருவாக்கப்பட்டுள்ளது. கவுதம் கார்த்திக்கும், நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் முறிவு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களே படத்தின் கதை. கொஞ்சம் விரிவா சொல்லணுமுன்னா 18வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். சென்சாரில் ‘ஏ’ சர்டிபிகேட் பெற்றப்படம். அதுனாலே குடும்பதோடு பார்ப்பது அவரவர் விருப்பம். இப்படத்துலே புதுமையான ஒன்றை இப்படத்தில் முயர்ச்சித்துள்ளோம். அதாவது முத்தக்காட்சி, கவர்ச்சி உடை அணிவது ஆபாசம். நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தை விருப்பமானவர்களோடு சந்தோஷமாக பார்க்கலாம்.

இன்றைய இயல்பு வாழ்க்கையை படமாக்கப்பட்டு இருப்பதால் இப்படத்தின் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கவலையில்லை. இப்படத்தை பார்த்து(தான்) மக்கள் கெட்டு போவார்கள் என எனக்கு தோணவில்லை. ட்ரைலரை பார்த்தே இரட்டை வசனத்துடன் மிகவும் ஜாலியா இருக்கு என பலர் பேர் ஹேப்பியா சொன்னாங்க, அதன் தொடர்ச்சியாகவே முழுவதும் இருக்கும். அதை தவிர்த்து வேறு எந்த தப்பான காட்சியும் இதில் இருக்காது. கதை பற்றி கூற வேண்டுமானால் கௌதம் புதுமையான தொழில் மேற்கொள்கிறார். நிக்கி கல்லூரி மாணவி இரண்டு பேரும் ஒரு நாள் காலை தங்கள் காதலை பிரேக்கப் பண்றாங்க அப்போ யாரையெல்லாம் சந்திக்காங்க அவங்களுக்கு என்னலாம் நடக்குதுங்கரதுதான் கதை,

முதல் பாதி காதல் இரண்டாம் பாதி ஏன் பிரேக்கப் என்று பரபரப்பாக கதை நகரும். ஹர ஹர மஹாதேவகி என்ற விடுதியில் நடப்பது தான் கதை எனவே அதையே படத்தோட பெயரா வச்சிட்டோம். சென்சார்லயும் “ஏ”க்கு அனுமதி கொடுக்கும் அளவுக்கு படத்தை எடுத்திருந்தோம். ஆனாலும் சென்சார்ல பெண் அதிகாரிகளும் பார்த்துட்டு நல்லா ஜாலியா இருக்குன்னுதான் சொன்னாங்க. மற்றபடி படத்தில் ஒரு தப்பான கருத்தும் கிடையாது. தங்கராஜ் சார்கிட்ட கதை சொன்னோம் அவருக்கு பிடிச்சிருந்தது. 18 பேருக்கு அப்புறம் கௌதம்தான் இதை படமா கதையா பார்த்தாரு கார்த்திக் சாரோட உள்ளத்தை அள்ளித்தா மாதிரி இருக்குனு கௌதம் பீல் பண்ணாரு.

அடுத்தாப்லே எடுக்கப் போற இருட்டு அறையில் முரட்டு குத்து என்பது ஒரு பேய் படம். அந்த கதைக்கு ஏத்தா மாதிரி தலைப்பு வைத்துள்ளோம். அதில் எந்த தவறும் இல்லை. நான் சரவணன் சார்கிட்ட உதவி இயக்குனரா இருந்தேன். கண்டிப்பா படத்துக்கு பெண்களும் வருவாங்க” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். மேலும் இந்த சமயத்தில் நான் என்னுடைய உதவி இயக்குனர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எந்நேரமும் படத்தை பற்றியும், படத்திற்கான இடத்தேர்வு பற்றியும் தீவிரமாக சிந்தித்து கொண்டிருப்பார்கள். அவர்களின் ஆர்வம் என்னை மேலும் ஊக்கப்படுத்தியது என்றார்.

error: Content is protected !!