விஷாலின் ‘ இரும்புத்திரை’ ரிலீஸ் தள்ளிப் போகுது!

விஷாலின் ‘ இரும்புத்திரை’ ரிலீஸ் தள்ளிப் போகுது!

தமிழ் திரைப்பட தயாரிப்பார் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். அர்ஜூன் வில்லனாக நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தன் படத்தின் கதை குறித்து இயக்குநர், “2013-ம் வருஷம் என் ஃப்ரண்டோட லைஃப்லே நடந்த ஒரு சம்பவம். அந்தச் சம்பவத்தை வைத்துதான் `இரும்புத்திரை’ படத்தின் ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணினேன். கொஞ்சம் விளக்கமா சொல்றதா இருந்தா, என் நண்பனின் போனுக்கு பேங்கில் இருந்து மெசேஜ் வந்தது. அதில் அவருடைய அக்கவுண்ட்டில் இருந்து 40,000 ரூபாய் எடுத்திருப்பதாக வந்தது. உடனே, பேங்கில் விசாரித்துப் பார்த்தால், பதில் சரியாக கிடைக்கவில்லை.

இந்தச் சம்பவம்தான், ஸ்க்ரிப்ட்டுக்கு காரணம். இந்தத் தப்புக்கு யார் காரணம், தப்பு எங்கே நடக்குதுனு ஆராய்ந்தேன். அதற்கான ரிசல்ட்தான் ‘இரும்புத்திரை’. நடந்த ஒரு சம்பவத்தின் விளைவாக என்னுள்ளே ஸ்பார்க்கான விஷயம் இது. ஆனால், இந்த விஷயத்துக்குள்ளே போகப் போக ஏகப்பட்ட புதிய விஷயங்கள் அதுகுள்ளே இருந்தது. சாதாரணமாக நாம நினைக்கிற விஷயம் பின்னாடி, பூதாகரமாக வெடிக்கும்.

உதாரணத்துக்கு, நாம மாலுக்குப் போகும்போது நம்மகிட்ட, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ”சார், உங்கள் போன் நம்பர், அட்ரெஸ், இமெயில் எழுதுங்க, உங்களுக்கு ஒரு லக்கி ட்ரா இருக்கு”னு சொல்லுவாங்க. நீங்க எழுதிக் கொடுக்கிற உங்க நம்பர்னால என்ன பிரச்னை வருதுனு உங்களுக்கு தெரியாது. அதுதான் ‘இரும்புத்திரை’. பூட்டப்பட்ட ஒரு ரகசியத்தைதான் ‘இரும்புத்திரை’னு சொல்லுவாங்க. நம்மகிட்ட இருக்கிற செல்போன், கம்ப்யூட்டர் திரைக்குப் பின்னாடி என்ன நடக்குது அப்படிங்குற விஷயம் நமக்கே தெரியாது. இது எல்லாத்துக்கும் என் படத்தில் பதில் இருக்கு” என்று முன்னரே தெரிவித்திருந்தார்

விஷால் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழி களில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற மே 11-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப் பட்டது. ஆனால், சொன்ன நாளில் இரும்புத்திரை வெளியாகாது என்று விஷால் தற்போது அறிவித்திருக்கிறார். கடந்த ஒன்றரை மாச ஸ்ட்ரைக்களுக்கிடையே சில தவறுகளால், ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ‘இரும்புத்திரை’ ரிலீஸ் தேதியை அறிவிப்பேன் என்று விஷால் தெரிவித்திருக்கிறார்

error: Content is protected !!