டாக்டர் ஜெ .வின் சுய சரிதை தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகிறது!

டாக்டர் ஜெ .வின் சுய சரிதை தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகிறது!

அன்பில் அன்னை தெரசாவாகவும், ஆற்றல் மிக்க வீரத்தில் ஜான்சிராணி லட்சுமிபாயாகவும் இனிமையாகப் பழகுவதில் இளகிய மனம்கொண்டவராகவும், ஈகை குணத்தில் எட்டாவது வள்ள லாகவும் உழைப்பில் உன்னதமாகவும் வாழ்ந்து மறைந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதில்லார் தோன்றலின் தோன்றாமை நன்று..’ என்ற திருக் குறளுக்கு ஏற்ப இருந்தவர் ஜெயலலிதா.“வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி…. மக்கள் மனதில் நின்றவர் யார்…’ என்ற எம்.ஜி.ஆர் பாட்டுக்கேற்ப, அவரது வழியில் வாழ்ந்து மறைந்த டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதையை  83 world cup, என் டி ஆர் சுய சரிதை ஆகிய படங்களை தயாரிக் கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படமாக தயாரிக்கிறது.

இந்திய அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவி இவர். திரையிலும் நிஜத்திலும் மக்களின் மனதில் ஆட்சி செய்தவர் செல்வி ஜெ.ஜெயலலிதா. மக்களின் பெருமதிப்பும் பக்தியும் தொடர்ந்ததால் முதலமைச்சரானதும் அம்மா என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். ஆண் கள் வரிசையாக நின்று அவரது காலில் சாஷ்டாங்கமாக விழும் (சர்ச்சைக்கு உள்ளானாலும்) அளவிற்கு மதிப்புவாய்ந்த ஒரே பெண் அரசியல்வாதியாக திகழ்ந்தார். இப்படி ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம். அவரு டைய சுய சரிதையை படமாக்குவத்தில் மிகுந்த பெருமை கொள்வதாக கூறுகின்றனர் vibri மீடியா நிறுவனத்தினர்.

“டாக்டர் ஜெ ஜெயலலிதா தேசிய அளவில் பிரசித்தி பெற்ற பிராந்திய தலைவர்களில் முக்கிய மானவர்.உலகெங்கும் உள்ள பெண்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம்.திரை துறையிலும், அரசி யலிலும் அவர் புரிந்த சாதனைகளுக்கு இந்த படத்தை சமர்பிக்கிறோம்.அவர் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த படத்தை துவக்க இருக்கிறோம். அன்றே first look கூட வெளியிட இருக் கிறோம்.” என்கிறார் vibri மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிருந்தா பிரசாத்.தமிழில் பல்வேறு வெற்றி படங்களை தந்த இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

“எங்களது vibri நிறுவனத்துக்கு சுய சரிதைகளை படமாக்குவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்த கதைக்கான pre production பணிகளில் இயக்குனர் விஜய் ஈடுபட்டு வருகிறார்” என்கிறாய் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி. தென்னிந்தியாவின் பிரதான நட்சத்திரங்களுடன், பிரபல பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

Vibri media நிறுவனத்தினருக்கு இந்த வருடம் முக்கியமான வருடமாகும். பல்வேறு வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிப்ப்பதோடு,83 உலக கோப்பை என்கிற ஹிந்தி படத்தையும் கபீர் கான் இயக்கத்தில் , ரன்வீர் சிங் கபில்தேவ் வேடத்தில் நடிக்க தயாரிக்கும் இந்த நிறுவனம், “என் டி ஆர் சுய சரிதை” திரைப்படத்தை பாலகிருஷ்ணா நடிக்க, கிரிஷ் இயக்கத்தில தயாரிக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய அனைத்து படங்களும் 2019 ஆம் ஆண்டு வெளி வரும் என்பதே உற்சாகமான சேதி.

error: Content is protected !!