ஜெருசலேம் விவகாரத்தில் ஐ. நா. புது முடிவு!

ஜெருசலேம் விவகாரத்தில் ஐ. நா. புது முடிவு!

கடந்த 1948 மே மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் வசமும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன. அதன்பிறகு 1967-ல் நடந்த அரபு போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. பின்னர் ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அந்த நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்பட்டன.

இந்த நிலையில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக புதன்கிழமை அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்கள் கொண்ட குழு ஆலோசனை மேற்கொண்டது.

இந்த கூட்டத்தின் முடிவில் ஜெருசலேம் தொடர்பான பிரச்சனை பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். எங்களைப் பொறுத்தவரை ஜெருசலேம் இரு நாட்டுக்கும் பொதுவான தலைநகரமாகதான் உள்ளது. ஐந்து ஐரோப்பிய நாடுகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளதை ஐ. நா. சபை நிராகரித்துள்ளது. ஐ. நா. பாதுகாப்பு சபையின் இந்த முடிவு குறித்து ஐ. நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹலே, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இது இஸ்ரேலுக்கு எதிரான விரோதப் போக்கு என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று வடகொரியா ஊடகம் வெளியிட்ட செய்தியில் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவித்த அமெரிக்காவுக்கு வடகொரியாவின் வெளியுறவு துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘‘டிரம்ப் போன்ற ஒரு மனநோயாளி ஐ.நாவில் ஒரு நாட்டின் அழிவிற்காக உரத்த குரல் கொடுப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இதன் மூலம் உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பது யார் என்று உலகம் புரிந்து கொண்டுள்ளது.’’‘‘டிரம்ப்பின் இந்த முடிவால் ஏற்படும் விளைவுகளுக்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும். தங்கள் உரிமைக்காக போராடும் பாலஸ்தீனம் மற்றும் அரபு நாட்டு மக்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம்’’ என வடகொரியா வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!