சென்னை மாநகரம், பெருநகர வளர்ச்சி குழுமம் ஆக மாறியுள்ளது!.

சென்னை மாநகரம், பெருநகர வளர்ச்சி குழுமம் ஆக மாறியுள்ளது!.

சென்னையில் தொடர்ந்து மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பெருநகர குழுமம் கடந்த 2008 ஆண்டு 2-வது மிகப்பெருந் திட்டத்தை வெளியிட்டது. அதன்படி வரும் 2026ல் மக்கள் தொகை 1 கோடியே 25 லட்சம் ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னை மாநகர் வளர்ச்சியை சமநிலைப்படுத்தவும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கட்டமைப்பை உருவாக்கவும் புறநகர் பகுதிகள் உருவாக்கப்பட்டன.

அதாவது சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் பல கிராமங்களிலிருந்து, சிறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே போகிறது .படிப்பதற்கு வரும் மாணவர்கள் வேலைக்காக இங்கே தங்கிவிடுகின்றனர். மேலும் வேலை நிமிர்த்தமாக வரும் மக்கள் சென்னையிலே தஞ்சமடைந்து விடுகின்றனர். சென்னையை சொந்தமாக கொண்டவர்களை விட சென்னையில் வந்து குடியேறிவர்கள் எண்ணிக்கைதான் அதிகம். இந்த மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் மேலும் வாகன நெரிசலைக் குறைக்கவும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் வட்டத்தையும் உள்ளடக்கி, 8,887 சதுர கி.மீ அளவிற்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒருகிணைந்த நகரமயமாக்கப்பட்ட இடங்களில் சமமான வளர்ச்சியை ஏற்படுத்த புதிய திட்ட வரையறை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பெருமளவில் தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் மக்கள் அங்கும் குடிபெயர்ந்து வருகின்றனர். இந்த காரணங்களால் சென்னையின் புறநகர் பகுதியும் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தவிர, பல தொழிற்சாலைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஒழுங்கற்ற முறையில் அங்கு உருவாகும் கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை பெருநகரின் எல்லையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.சென்னையை பெருநகரமாக்க திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்கள் இணைக்கப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தாலுகாவும் சேர்க்கப்படுகிறது.

இந்ததகவலை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் சட்டசபையில் அறிவித்தார். தற்போது சென்னை பெருநகரம் 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் சென்னை பெருநகரம் 8,878 சதுர கி.மீட்டர் ஆக விரிவடையும். இதனால் சென்னை பெருநகரம் 7 மடங்கு பெரியதாகிறது.

ஐதராபாத் 7,100 சதுர கி.மீட்டர் பரப்பளவும், பெங்களூர் 8,005 சதுர கி.மீட்டர் பரப்பளவுடனும் உள்ளன. இதை மிஞ்சும் வகையில் பெரிய பெருநகரமாக சென்னை மாறுகிறது.

error: Content is protected !!