தேனா பேங்கில் புரொபேஷனரி ஆபிசர் ஜாப்!
பொதுத்துறை வங்கிகளில்தொடர்ந்து சிறந்த சேவையாற்றி வரும் தேனா வங்கியும் அமிதி பல்கலைக் கழகமும் இணைந்து அந்த வங்கியில் 300 புரொபேஷனரி அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான படிப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வயது: விண்ணப்பதாரர்கள் 20 – 29 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் அப்ஜெக்டிவ் மற்றும் டெஸ்கிரிப்டிவ் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். இதன் பின்னர் குழு விவாதம் மற்றும் நேர்காணல் முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017 மே 9.
தேர்வு நாள்: 2017 ஜூன் 11.
விபரங்களுக்கு: ஆந்தை வேலை வாய்ப்பு