பார்லிமெண்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் திறப்பு!

பார்லிமெண்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் திறப்பு!

பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், கடந்த 1996 (13 நாட்கள்), 1998-99 (13 மாதங்கள்) மற்றும் 1999-2004 ஆகிய ஆண்டுகளில் 3 முறை பிரதமராக பதவி வகித்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி வாஜ்பாய் காலமானார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவருக்கு ஏற்கெனவே பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதுமட்டுமின்றி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் அவரது பெயர் சூட்டி வருகிறது.

இந்நிலையில், வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவரது உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆஸாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts

error: Content is protected !!