சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணியின் ராஜினாமா ஏற்பு!

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணியின் ராஜினாமா ஏற்பு!

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணியின் ராஜினாமாவை இரண்டு வாரங்கள ஆன நிலையில் ஏற்றுக் கொண்ட சனாதிபதி ராம்நாத் கோவிந்த், மூத்த நீதிபதி வினீத் கோத்தாரியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

மும்பை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த தஹில் ரமணி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றி கடந்த மாதம் 28-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் முடிவு செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, கொலீஜியத்திற்கு தஹில் ரமணி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை கொலீஜியம் ஏற்பாத நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவருக்கு கடந்த 6ந் தேதி அவர் கடிதம் அனுப்பினார்.

மேலும் அதைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக அவர் நீதிமன்ற விசாரணைகளில் பங்கெடுக்கவில்லை. இந்நிலையில், தஹில் ரமணியின் ராஜினாமாவை ஜனாதிபதிக்கு ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இது குறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனி டையே திரிபுரா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நீதிபதி குரேஷியின் பெயரை கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது.

error: Content is protected !!