பேடிஎம் மூலம் பயனர்களின் தகவல்கள் திருட்டா? – அதெல்லாம் உண்மையில்லையாம்!
அதுமட்டுமல்லாமல் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு இந்தியர்கள் டிஜிட்டலுக்கு மாறும் போக்கை சரியாக கணித்து அதற்கேற்றார்போல் உத்திகளை பேடிஎம் வகுத்து வருகிறது. கடந்த நவம்பர் மாத இறுதியில் பேடிஎம் பேமென்ட் வங்கியை தொடங்கியது. இந்தியாவில் மிகப் பெரிய தொழில்நுட்பங்ளுடன் கூடிய தொழில்நுட்ப வங்கியாக உருவாக வேண்டும் எனும் நோக்கத்தோடு இந்த பேமென்ட் வங்கியை பேடிஎம் நிறுவனம் தொடங்கியிருக்கிறது.
மேலும் இந்த பேமென்ட் வங்கியை தொடர்ந்து இந்தியா முழுவதும் 1 லட்சம் ஏடிஎம் மையங்களை அமைப்பதற்கு இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதனிடையே பேடிஎம் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப் பட்டு வருவதாக வெளிவரும் செய்திகள் அவதூறானவை என பேடிஎம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது எல்லா இணையத்தளங்களிலும் ஒரு சென்சேஷனல் செய்தியாகிக் கொண்டிக்கும் ஒன்றுதான் பேடிஎம் தகவல் திருட்டு எனும் செய்தி. அதாவது பணப் பரிமாற்றம் மற்றும் கட்டணம் செலுத்துதல் போன்ற வசதிகளுக்கான பயன்படும் பேடிஎம் எனும் தனியார் சேவை நிறுவனம் தங்களது வடிக்கையளர்களிடம் இருந்து தகவலை திருடுவதாக வந்த செய்தியை அந்த நிறுவனம் அந்த செய்தி போலியானது என மறுத்துள்ளது.
இது தொடர்பான ட்விட்டர் பதிவில் தகவல் திருடப்பட்டுள்ளது என்ற தகவல் முற்றிலும் போலியானது. வாடிக்கையாளர்களின் தகவல்கள் அனைத்தும் 100 சதவிகிதம் பாதுகாப்பிலுள்ளது. சட்ட அமலாக்க துறையின் வேண்டுதலால் அவர்களை தவிர வேறு யாரிடமும் பகிரப்படவில்லை எனவே யாரும் நம்ப வேண்டாம் தொடர்ந்துவரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி என தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியிருந்தது. தற்போது பேடிஎம் நிறுவனத்தின் மீது இந்த குற்றச்சாட்டும் பேடிஎம்மின் பதிலும் பார்ப்பபை ஏற்படுத்தியுள்ளது.