ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்கு நியூயார்க்கில் பலத்த வரவேற்பு!

ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்கு நியூயார்க்கில் பலத்த வரவேற்பு!

நடிகர் விதார்த் நடிப்பில் மிக விரைவில் வெளிவரவிருக்கும் படம் ஒரு கிடாயின் கருணை மனு. ஈராஸ் தயாரித்துள்ள இந்த படம் சமீபத்தில் நியூயார்க்கின் விருது விழாவில் காண்பிக்கப்பட்டது. அப்போது முழுப் படத்தை பார்த்த அனைவரும் வயிறு குலுங்க சிரித்து, கை தட்டி பாராட்டியுள்ளனர். அத்துடன் அங்கு வாழும் இந்திய மக்கள் இது போன்ற படங்களை மேலும் தயாரிக்குமாறு ஈராஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இப்படக்குழு இந்த வரவேற்பை கண்டு மிகுந்த மகழ்ச்சியில் உள்ளது, மேலும், தமிழகத்திலும் இதே போன்ற வரவேற்பு கிடைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையாக உள்ளனர்.

okidai may 7

ஆம்.. அறிமுக இயக்குநர்களுக்கும் அவர்களின் தரமான படைப்புகளுக்கும் உகந்த ஆண்டு 2017. அதனை எங்களின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தும்” என்கிறார் ‘ஈரோஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் சாகர் சத்வானி ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறும், அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்வதும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் சவாலான காரியமாகவே இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் உலக சினிமா மீது வைத்திருக்கும் பேரார்வம் தான். தற்போது அவர்களின் ரசனைகளை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் முழுமையாக பூர்த்தி செய்ய தயாராக இருக்கின்றது, நல்ல தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் ‘ஈரோஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம். அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா (காக்கா முட்டை புகழ் மணிகண்டனின் உதவியாளர்) இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் விதார்த் மற்றும் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் என இரண்டின் கலவையில் மிக அழகாக உருவாகி இருக்கும் எங்களின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம், வருகின்ற மே 6 ஆம் தேதி அன்று, நியூயார்க் நகரத்தில் உள்ள ‘வில்லேஜ் திரையரங்கில் திரையிடப்படுகின்றது. அதுமட்டுமின்றி நியூயார்க் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் படம் திரையிடப்பட இருக்கின்றது” என்று கூறுகிறார் ஈரோஸ் சவுத் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சிட்தி புஜாரா.

C9g6t1QU0AAllzd

புதுமையான கதைக்களங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம், சமீபத்தில் வெளியான ‘துருவங்கள் 16’, ‘குற்றம் 23’, ‘மாநகரம்’ மற்றும் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படங்கள். நிச்சயமாக அந்த வரிசையில் எங்களின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படமும் இடம் பெறும் என உறுதியாக நம்புகின்றேன்.

சுரேஷ் சங்கையாவின் கதை மீதும், அவர் படத்தை உருவாக்கிய விதமும் தான் எங்களின் அந்த உறுதியான நம்பிக்கைக்கு காரணம். எங்களின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் அந்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும்” என்கிறார் ‘ஈரோஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் சாகர் சத்வானி.

error: Content is protected !!