புது ஐம்பது ரூபாய் + புது இருநூறு ரூபாய் நோட்டெல்லாம் வரப் போகுது!

புது ஐம்பது ரூபாய் + புது இருநூறு ரூபாய் நோட்டெல்லாம் வரப் போகுது!

விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. கடல் நீலநிறத்தில் காட்சியளிக்கும் 50 ரூபாய் நோட்டு கட்டுகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளன. இந்த புதிய 50 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்றும், புதிய நோட்டுகள் புத்தாண்டு முதல் புழக்கத்திற்கு விடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு பிரதமர் மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது. மேலும், ரூ.20 , ரூ50 நோட்டுகளையும் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்து இருந்தது. அந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள வரிசை எண்கள் ஏறுவரிசையிலும், இன்டாலிகோ அச்சு இல்லாமல் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. ஏறக்குறைய 8 மாதங்களுக்கு பின் அந்த புதிய 50 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கபட்டுள்ள படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த புதிய 50 ரூபாய் நோட்டு நீலப்பச்சை நிறத்தில், பழைய 50 ரூபாய் நோட்டுகளைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கிறது. மகாத்மா காந்தி உருவம் பதிக்கப்பட்டும், தற்போதுள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கையொப்பம் இடப்பட்டுள்ளது. இன்சட் லெட்டர் இல்லாமல், வரிசை எண்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

ரூபாய் நோட்டின் பின்புறத்தில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும், இந்த புதிய 50 ரூபாய் நோட்டில் தென் இந்திய கோயிலின் உருவம் ஒன்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது.இந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், வடிவம் ஆகியவை அனைத்து தற்போது இருக்கும் நோட்டுகளைப் போல இருக்கும் என்று கடந்த டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

இதனிடையே இந்த மாதம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்காக 100 கோடி அளவிலான 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வருகிறது எனவும் கடந்த ஜூலை மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!