மனைவியுடன் கட்டாய உறவு தப்பில்லை: ஆனால் ஓரல் செக்ஸூக்கு வற்புறுத்துவது குற்றம்! – குஜராத் ஐகோர்ட் தீர்ப்பு

மனைவியுடன் கட்டாய உறவு தப்பில்லை: ஆனால்  ஓரல் செக்ஸூக்கு வற்புறுத்துவது குற்றம்! – குஜராத் ஐகோர்ட் தீர்ப்பு

நம் நாட்டில் பெண்ணின் திருமண வயது 18. அத்துடன் பெண்ணுடன் உடலுறவு கொள்ளத் தகுதியான வயதும் சட்டப்படி 18 தான். ஆனால், மிக விசித்திரமாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-ன் உட்பிரிவு 2-ல் வழங்கப்பட்டுள்ள விதிவிலக்கின்படி 15 முதல் 18 வயது வரையுள்ள மனைவியுடன் கணவன் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது என்று கூறப்பட்டிருந்தது. பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்னர் ‘மனைவியாக இருந்தாலும் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்வது குற்றம்’ என்று பின்னர் (2017ல்) கூறியது. அத்துடன் திருமண உறவுக்குள் ஒருவர் மீது பாலியல் உறவு திணிக்கப்படலாமா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது..திருமண உறவுக்குள் எல்லா உரிமையும் ஆணுக்கு இருக்கிறது என்றே எல்லோரும் நினைக்கின்றனர். இது பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் அவர்கள் அந்தரங்கம் சார்ந்த உரிமை என்ற புரிதல் ஏற்படவே இல்லை. இன்னொரு புறம் திருமண அமைப்புக்குள் ‘தாம்பத்திய உரிமையை இருபாலரில் யார் வேண்டுமானாலும் சட்டபூர்வமாகவே வற்புறுத்தி பெற முடியும், அது சரியான செயலே’ என்றும் நினைக்கிறார்கள்.

அதே சமயம் கடுமையான பிறப்புறுப்பு மற்றும் காயங்களுடன் மருத்துவமனைக்கு வரும் பெண்கள், அந்தக் காயங்களுக்குத் தங்கள் கணவனே காரணம் என்று வாக்குமூலம் தருகிறார்கள். ஆனால், காவல்துறையினர் இதைக் குற்றமாகப் பதிவுசெய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில்தான் கணவன் மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொள்ளுதல் பலாத்காரமாகாது ஆனால் இயற்கைக்கு மாறாக ஓரல் செக்ஸ் வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தினால் அது வன்கொடுமையாகும் என குஜராத் கோர்ட் தெரிவித்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தனது கணவருக்கு எதிராக உடல்ரீதியான துன்புறுத்தல் குறித்து புகார் அளித்திருந்தார். அந்த மனுவில், தனது கணவர் தன்னை வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்ததோடு விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறாகவும் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறும் துன்புறுத்துவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரது மனைவியின் இந்த குற்றச்சாட்டை மறுத்த கணவர் குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நிதிபதி 18 வயதுக்கு உட்பட்ட மனைவியுடன் கட்டாய உடலுறவு கொள்வதே பலாத்காரமாகும், 18 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் கணவர் கட்டாயமாக உடலுறவு கொள்வது பலாத்காரமாகாது எனவும் இயற்கைக்கு மாறாகவும் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறும் துன்புறுத்துவது கடும் குற்றச்செயல் என நீதிபதி தெரிவித்தார்.

error: Content is protected !!