நன்றி மழையை செயற்கையாக பொழியச் செய்த க.க.கொ. டீம்!

நன்றி மழையை செயற்கையாக பொழியச் செய்த க.க.கொ. டீம்!

துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்திருந்த காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கியிருந்தார். பிப்ரவரி 28 அன்று வெளியான இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மக்கள் என அனைவரிடத்திலும் பாராட்டு பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாட படக்குழு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

இந்நிகழ்வில் வீடியோ வழியே Viacom 18 நிர்வாக அதிகாரி அஜித் அந்தேரி பேசியது…

Viacom 18 மூலம் தனித்தன்மை மிக்க படங்கள் உருவாக்கவே நாங்கள் விரும்புகிறேம். எங்கள் நிறுவனம் மூலம் வித்தியாசமான படங்கள் செய்யவே விரும்புகிறோம் அந்த வகையில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. துல்கர் இப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு நன்றி. அவர் மூலம் தான் இந்தப்படம் கவனம் பெற்றது. தேசிங்கு பெரியசாமி மிகத் திறமை வாய்ந்தவர். படத்தை அவர் கையாண்டிருந்த விதம் மலைக்க வைத்தது. இப்படத்தை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி பேசியது…

நான் ஜெயிப்பேன் என நம்பி எனக்கு ஆதரவளித்த அம்மா அப்பாவுக்கு நன்றி. இப்படத்தில் கௌதம் மேனனை முதலில் யோசிக்கவில்லை. அப்புறம் அவர் தான் வேண்டும் என்று அவரை துரத்தி, துரத்தி தான் நடிக்க வைத்தோம். அவர் ஒத்து கொண்ட பிறகு தான் படத்தின் வெற்றி உறுதியானது. க்ளைமாக்ஸ் காட்சியை பயந்து பயந்து தான் அவரிடம் சொன்னேன். ஆனால் சூப்பராக இருக்குடா, என்று சொல்லி அவரே காபி ஷாப்பில் எடுக்கலாம் என்று சொல்லி, அவரே வசனமும் எழுதி, நடித்து தந்தார். புதியவர்களை ஆதரிக்க பெரிய மனது வேண்டும். அவருக்கு நன்றி. நேரம் ஒதுக்கி வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

நடிகை நிரஞ்சனி பேசியது..

மீடியாவால் தான் இந்தப்படம் வெற்றி பெற்றுள்ளது. உங்களுக்கு நன்றி. ரசிகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்தும்போது பெருமையாக இருக்கிறது. என்னை ஏற்றுக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் ரக்‌ஷன் பேசியது

இது எனக்கு முதல் படம். என்னை துல்கர் எல்லா காட்சிகளிலும் விட்டு கொடுக்காமல் கூடவே நிப்பாட்டி நடிக்க வைத்தார். . கௌதம் சாருடன் முதல் முதலாக அறிமுகமானபோதே என்னை வாழ்த்தினார். “ஹாய் ஹீரோ” என்று சொல்வார். எதுவுமே பேசாமலே படத்தில் மிரட்டியுள்ளார். பத்திரிக்கை நண்பர்களுக்கும் படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

நாயகி ரிது வர்மா பேசியது…

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” மறக்க முடியாத இனிமையான பயணம். தேசிங்கின் ஐந்து வருட பயணம் இந்தப்படம் அணுஅணுவாக ரசித்து உருவாக்கியுள்ளார். கௌதம் சாருக்கு நான் ரசிகை அவருடன் நடித்தது மகிழ்ச்சி. துல்கர் நான் நன்றாக நடிக்க காரணம் அவர் தான். தர்ஷன் கலக்கி விட்டார். நிரஞ்சனா நல்ல நண்பியாக மாறிவிட்டார். இப்படத்தை வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றி.

கௌதம் மேனன் பேசியது

இந்தப்படத்தை எல்லா இடத்திலும் கொண்டு சேர்த்த மீடியா நண்பர்களுக்கு நன்றி. நீண்ட இடை வேளைக்கு பிறகு திரையரங்கில் இந்த படம் மூலம் மேஜிக் நடந்திருக்கிறது. இதை சாதித்த படக் குழுவுக்கு வாழ்த்துகள். என் படங்களில் இருக்கும் உணர்வு தேசிங்குவிடம் கிடைத்தது. அதனால் தான் இந்தப்படம் நடித்தேன். எனக்கு பிடிக்காவிட்டால் நான் எந்தப்படத்திலும் நடிக்க மாட்டேன். எனக்கு பிடித்து தான் இந்தபடத்தில் நடித்தேன். கேமரா முன்னாடி நடிப்பதில் எனக்கு பயம் தான். ஆனால் அந்த பயத்தை போக்கியது விஜய் மில்டன் தான். அவர் எனக்கு ஒரு கதவை திறந்து விட்டுள்ளார். துல்கர் இந்தப்டத்தில் சூப்பராக இருந்தார். ரிது, நிரஞ்சனி, தர்ஷன் அனைவருக்கும் வாழ்த்துகள்.

துல்கர் சல்மான் பேசியது…

ரொம்பவும் உணர்வுபூர்வமான தருணமாக இருக்கிறது. தேசிங்கு ஐந்து வருடமாக உழைத்து உள்ளார். நிறைய ஆராய்ச்சி செய்து உள்ளார். அவர் மிக உண்மையாக சினிமாவை நேசிப்பவர். இங்கு எல்லோருமே நல்ல மனதுக்காரர்கள். தான் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. எல்லோரும் எல்லோரையும் பாரட்டுவது நிஜம். இந்தப்படம் அனைவர் மீதும் அன்பை சேர்த்துள்ளது. எல்லோரும் இதை அவர்களது படமாக கொண்டாடுகிறார்கள் தேசிங்கிற்கு நன்றி. . மனதளவில் என்னை அதிகம் பாதித்துள்ளது இந்தப்படம். இந்தபடத்தில் கௌதம் சார் தான் ஹீரோ. அவரை திரையில் பார்த்து நானும் கைதட்டி ரசித்தேன். அவர் ஆசிர்வாதம் தான் இந்தப்படம். மீடியா நண்பர்கள் அவர்கள் படம் போல் இந்தபடத்தை எடுத்து கொண்டாடியதற்கு நன்றி.

error: Content is protected !!