புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமனம்
புதுச்சேரிக்கு என்று தனியாக துணை நிலை ஆளுநர் இதுவரை நியமிக்கப்படவில்லை, அந்தமான் நிகோபார் துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பாகத்தான் புதுவையை கவனித்து வந்தார்.இந்நிலையில் புதுச்சேரியில் 17 இடங்கள் வெற்றியுடன் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண்பேடி டெல்லியில் பணியாற்றியவர். இவர் சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்து, டெல்லி சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் தொடர்ந்து கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தற்போது கிரண் பேடியை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமித்துள்ளது புதுச்சேரியில் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகப் போகவே தெரியும்