கருப்பன் – குடும்பத்தோடு பார்த்து ரசிக்கத் தக்க படமாக்கும்!

கருப்பன் – குடும்பத்தோடு பார்த்து ரசிக்கத் தக்க படமாக்கும்!

ஒரு படத்தை சினிமா ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வந்து பார்ப்பதில் , எந்த மனநிலையில், எதிர்பார்ப்புடன் பார்க்க வேண்டும் என்பதையும் முடிவுசெய்வதில் அப்படத்தின் சென்சார் சான்றிதழ் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண் ரசிகர்கள் பெருகிக்கொண்டே வரும், தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. தங்களது படங்களின் சென்சார் சான்றிதழ்களுக்கு என்றுமே முக்கியத்துவம் தரும் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அவர்களுடைய நிறுவனம் ஸ்ரீ சாய் ராம் creations விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணையும் படம் ‘கருப்பன்’. இப்படத்தை இயக்குனர் பன்னிர்செல்வம் இயக்குவதினால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. எல்லாத்தரப்பட்ட மக்களுக்கும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ‘கருப்பன்’ ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர், எந்த வித தயக்கமுமின்றி ‘யு’ சான்றிதழ் தந்துள்ளனர். இந்த செய்திப் படக்குழுவினரை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சான்றிதழ் இப்படம் குடும்பத்துடன் கண்டு ரசிக்கக்கூடிய படம் என்பதை மேலும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இதனால் இப்படத்தின் வணிக திறனும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

முன்னதாக இதில் நடித்தது பற்றி தான்யா கூறியதாவது….”இந்த படம் மதுரை கதை களத்தில் உருவாகி இருக்கிறது. அன்புச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கிறேன். அந்த பெயருக்கு ஏற்ப அன்பான பெண்ணாக நடித்து இருக்கிறேன். இதில் நான் முழுமையான மதுரை பெண்ணாகவே மாறி நடித்துள்ளேன். படம் அருமையாக வந்துள்ளது. அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப் படத்தில் நடித்தனர். இந்த படத்தில், விஜய்சேதுபதியுடன் நடித்திருப்பதை என் வெற்றியாகவே கருதுகிறேன். இதற்கு முன்பு நடித்த 2 படங்களிலும் நானே டப்பிங் பேசினேன்.

‘கருப்பன்’ படம் முழுக்க முழுக்க மதுரை மண்வாசனை கதையில் உருவாகி இருக்கிறது.நானோ சென்னையில் பிறந்து வளர்ந்த பெண். மதுரை தமிழை தெளிவாக பேச முடிய வில்லை. ஆகவே, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான் இதில் எனக்கு குரல் கொடுத்து இருக்கிறார். இதில் முழுமையான மதுரை பெண்ணாக வருவது, எனது நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்தது. முதல் இரண்டு படங்களை விட இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் முக்கிய இடம் பிடிப்பேன். தொடர்ந்து நடித்து நம்பர் ஒன் நடிகையாக மாறவேண்டும்” என்றார் அவர்.

error: Content is protected !!