இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொன்னது சரித்திர உண்மை! – கமல் ரிபீட்!

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொன்னது சரித்திர உண்மை! – கமல் ரிபீட்!

“நான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொன்னது சரித்திர உண்மை. நான் அவரக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். எனக்கு பல இடங்களில் பெருமை கிடைக் கிறது சில இடங்களில் அவமானப்படுத்துகிறார்கள். நான் பேசுவது நிஜம். நான் நினைத்திருந்தால் பயங்கரவாதி என்றோ கொலைகாரன் என்றோ சொல்லியிருக்கலாம். நீங்கள் கூடதான் என் தீவிர ரசிகர்கள் (கூட்டத்தை நோக்கி) எங்கள் பேச்சில் இனி தீவிர அரசியல் பிறக்கும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் இன்று தெளிவுபட பேசியுள்ளார்.

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்,சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் தான் நாதுராம் கோட்ஸே என்றும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார்.கமல் இவ்வாறு பேசிய தற்கு,பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கமல் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் அவர் தீவிரவாதம் குறித்து பேசியதற்கு விளக்கம் அளித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது, “நான் பேசியது சரித்திர உண்மை. இது அனைவருக்கும் தெரியும். மதச்செருக்கு எங்கும் செயல்படாது. உண்மையே வெல்லும்.தீவிர அரசியலில் இறங்கியதால், தீவிரமாகத் தான் பேசுவேன். கோட்ஸே மட்டுமா இந்து? கொல்லப்பட்ட காந்தியும் இந்து தான்.தீவிரவாதத்திற்கான அர்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். நான் என்ன பேசினேன் என்பதை முழுமையாக கேட்டு விட்டு பேச வேண்டும். என் வீட்டில் உள்ளவர்களும்இந்துக்கள் தான். எனவே இந்துக்கள் புண்படும் வகையில் நான் பேச மாட்டேன்.

என்னயுடைய கொள்கையை வீழ்த்த என் கொள்கையையே கையில் எடுக்காதீர்கள். தோற்றுப் போவீர்கள். இந்த அரசை வீழ்த்துவோம். வீழ்த்துவோம் என்றால் வன்முறையால் அல்ல ஜனநாயகத்தால்.. வெள்ளை வேட்டியில் சிறு கரைக்கூட படாமல் நீங்கள் வீட்டுக்கு போகலாம். நான் எந்த இடத்திலும் நான் எந்த மதத்தையும், சாதியையும் பற்றி சந்தோசமாக பேசுவேன், விமர்சித்து பேசுவேன் காரணம் இது என் மக்கள். அந்த உரிமையில் சொல்கிறேன். நான் படம் எடுப்பதும் அப்படிதான். கோபப்படுபவர்கள் தயவு செய்து ஹேராம் படத்தை பாருங்கள்.. அத சொல்லி 20 வருஷம் ஆகுது. மருந்து கசப்புதான். உங்கள் வியாதி மாற இந்த கசப்பு உதவும்

ஆனால் தலையையும், வாலையும் வெட்டிவிட்டு இடையில் இருப்பதை மட்டும் ஊடகங்கள் ஒளிபரப்புகிறார்கள். அப்படி என்றால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவது போல, ஊடகங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யவேண்டும். நான் செய்தது தவறு என்றால் ஊடகங்கள் செய்ததும் தவறு தான்”என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!