சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்!

சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்!

கத்ரி கோபால்நாத்(69) உடல்நலக்குறைவால் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) காலமானார்.

கத்ரி கோபால்நாத் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள், இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில், தந்தையார் தனியப்பா என்பவருக்கும், தாயார் கனகம்மாக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு நாதஸ்வரக் கலைஞர் ஆவார். ஒருமுறை மைசூர் அரண்மனையில் இசைக்குழு ஒன்று சாக்சஃபோனை வாசித்தப்போது, அந்த இசையால் மிகவும் ஈர்க்கப்பட்ட இவர், அன்றிலிருந்து சாக்சஃபோன் இசையில் ஒரு சிறந்த கலைஞனாக வேண்டும் என ஆசைக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, மங்களூரின் கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சஃபோன் வாசிப்பை கற்கத் தொடங்கினார். பின்னர், சென்னையில் பிரபல மிருதங்க இசை மேதை டி. வி. கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் இசைப் பயிற்சி மேற்கொண்டார்.

அவர் தன்னுடைய முதல் இசை நிகழ்ச்சியை செம்மை நினைவு அறக்கட்டளையில் முதன் முதலாக அரங்கேற்றினார். அதன் பிறகு, 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற “பாம்பே ஜாஸ் இசைவிழா” நிகழ்ச்சி, இவரின் இசை பயணத்தில் மாபெரும் திருப்புமுனையினை ஏற்படுத்தியது எனலாம். அந்த இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல கலிஃபோர்னியா ஜாஸ் இசைக் கலைஞர் ஜான் ஹன்டி என்பவர், இவருடைய சாக்சபோன் இசையில் மிகவும் ஈர்க்கப்பட்டது மட்டுமல்லாமல், இவருடன் இணைந்து இசை வழங்கவும் விரும்பினார். அதன் பிறகு, கர்நாடக இசையுடன் இணைந்து வழங்கப்பட்ட ஜாஸ் இசைக்கோர்வை, இசை நெஞ்சங்களை மிகவும் கவர்ந்தது.

1994 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘டூயட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் தன்னுடைய சாக்சஃபோன் இசையை அரங்கேற்றிய அவர், அத்திரைப்படத்தில் ‘கல்யாண வசந்தம்’ என்ற ராககத்தில் இவர் வாசித்த சாக்சபோன் இசை உலகப் புகழ்பெற்றது எனலாம். இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களிலும் சாக்சஃபோன் இசை பயன்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், பெரும்பான்மை இசை சாக்சஃபோனினை கொண்டு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும், இத்திரைப்படம் இவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஜெர்மன் என வெளிநாடுகளிலும், தன்னுடைய சாக்சஃபோன் இசையில் இந்தியப் பாரம்பரிய இசையைக் கொண்டு சேர்த்த இவருக்கு, பராகுவேயில் நடந்த ‘ஜாஸ் இசைவிழா’, ஜெர்மனியில் நடந்த ‘பெர்லின் ஜாஸ் இசைவிழா’, மெக்சிகோவில் நடந்த ‘அனைத்துலக செர்வாண்டினோ இசைவிழா’ போன்றவை மிகப் பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது. மேலும், 1994 ஆம் ஆண்டு லண்டன் பிபிசி நடத்திய ‘உல்லாசவீதி’ என்னும் இசை விழாவில், மனதை மயக்கும் தன்னுடைய சாக்சஃபோன் இசையை வழங்கி மேலும் சிறப்பு பெற்றார். பிபிசி நடத்தும் இசைவிழாவிற்கு அழைக்கப்பட்ட முதல் கர்நாடக இசைக் கலைஞர் இவர் தான் என்பது மேலும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.

விருதுகளும் மரியாதைகளும்

1996 – ‘கர்நாடக கலாஸ்ரீ’,
1998 – ‘கர்நாடக ராஜ்யோட்சவா’ விருது.
2004 – இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
2004 – பெங்களூர் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘மதுப்புறு முனைவர்’ பட்டம்.
தமிழ்நாடு அரால் ‘கலைமாமணி’ விருது.
‘சாக்சஃபோன் சக்ரவர்த்தி’ மற்றும் ‘சாக்சஃபோன் சாம்ராட்’ விருது.
‘கானகலா ஸ்ரீ’ மற்றும் ‘நாதபாசன பிரம்மா’ விருது.
‘சுனதா பிரகாசிகா’ மற்றும் ‘சங்கீத வாத்திய ரத்னா’ விருது.
‘நாத கலாரத்னா’ மற்றும் ‘நாத கலாநிதி’ விருது.
‘ஆசுதான வித்வான்’ மூலம் ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்’, ‘ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம்’, ‘ஸ்ரீ அஹோபில மடம்’ மற்றும் ‘ஸ்ரீ பிள்ளயபட்டி கோவில்’ விருது.
மெட்ராஸ் ரோட்டரி கழகத்தின் மூலம் ‘மேதகைமை விருது’.
இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை எனக் கூறலாம், அத்தகைய அற்புதமானக் கலையை சாக்சஃபோன் என்னும் இசையில் ஜனரஞ்சகமாக்கி பல இசைக் கச்சேரிகளில் அதை அரங்கேற்றி, கோடானுகோடி ரசிகர்களை இசை என்னும் மழையில் நனையச் செய்த மகா கலைஞன் இன்று காலமானார். அவரின் மறைவு கேட்டு பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!