’காதல் அம்பு’ பாடல் & டிரைலர் ரிலீஸ் பங்கஷனின் ஹைலைட்ஸ்!

’காதல் அம்பு’ பாடல் & டிரைலர் ரிலீஸ் பங்கஷனின் ஹைலைட்ஸ்!

எம்.டி.பி.சி (MDPC) அண்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர்.எம்.டி.சுரேஷ் பாபு தயாரிக்கும் படம் ‘காதல் அம்பு’. அறிமுக இயக்குநர் பிரவீன்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹீரோவாக ஸ்ரீனி வாச நாயுடு நடித்திருக்கிறார். மற்றும் பரத், கிரண், ரேஷ்மா, மனீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் நாகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சன்னி டான் இசையமைத்து இருக்கிறார். சுரேஷ் பாபு படத்தொகுப்பு செய்து இருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை பிரசாத் லேப்-பில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினரும், சிறப்பு விருந்தினர் களும் பேசியதாவது

இயக்குநர் பேரரசு பேசும் போது, “ஒளிப்பதிவாளர் தமிழனாக இருந்தாலும் கன்னடத்தில் 3 படங்கள் பணியாற்றி இருக்கிறார், தமிழில் இதுதான் முதல் படம். பிறமொழி திரைப்படங்களிலும் பணியாற்றுங்கள், பிறமொழிகளில் வெற்றிப்பெற்றால் வியாபார வெற்றி தான். தாய்மொழியில் வெற்றியடைவது தான் ஆத்ம திருப்தி தரும்” என்றார்.

நடிகர் ஆரி பேசும்போது, “இப்படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகங்கள். இவர்களைப் போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும். இரண்டு மூன்று நாட்களாக, கவின் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அந்நிகழ்ச்சியைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இந்த விஷயங்களைத் தாண்டி நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது சுபஸ்ரீயின் மரணம் தான். யாருக்கோ வைத்த பேனர் அது காற்றடித்ததில், அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து, விபத்துக்குள்ளாக்கி இறந்துவிட்டார். இந்த விபத்திற்குப் பிறகு திமுக-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் இனிமேல் எங்கள் கட்சி விழாவிற்கு பேனர் வைக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன். அவர்களுக்கு ஓட்டுப் போடுவேன். அதேபோல், சினிமாத்துறை சார்ந்தவர்களும் பேனர் வைக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக விருக்கும் ‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்கக்கூடாது என்று அவர் கூறினால் நன்றாக இருக்கும்” என்றார்.

படத்தின் ஹீரோ ஸ்ரீனின்வாச நாயுடு பேசுகையில், “நானும் பிரவீனும் ஒரே கம்பெனியில் பணி புரிந்துக் கொண்டிருந்தோம். அப்போது உங்களை வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்றார். முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிரவீனின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாத்தனம் கலந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதற்கு முன்பு இதென்ன இப்படி படம் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்துக் கொண்டிருப்பேன், ஆனால் இப்படத்தில் நடித்த போது தான் ஒரு திரைப்படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்று தெரிந்து கொண்டேன்.” என்றார்.

விழாவின் இறுதியில், ‘காதல் அம்பு’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.

‘காதல் அம்பு’ படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – விக்னேஷ் நாகேந்திரன், இசை – சன்னி டான், படத்தொகுப்பு – சுரேஷ் பாபு, இணை தயாரிப்பு – நவீன் குமார், தயாரிப்பு – Dr. எம்.டி.சுரேஷ் பாபு, தயாரிப்பு நிறுவனம் – MDPC கிரியேஷன்ஸ் அண்டு ப்ரோடுக்ஷன்ஸ்.

error: Content is protected !!