உலக அளவில் உதவி செய்ய ஆர்வம் காட்டுவதில் முன்னிலை வகிக்கும் இந்தியர்கள்!
மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். பிறரின் கனவு களை அடைய நாம் உதவினால், நம் இலக்கை நாம் எளிதாக அடைந்து விட முடியும் என்பது இயற்கை விதி. ஏதோ ஒரு வழியில் அதற்கான உதவி நமக்குக் கிடைத்தே தீரும். நம்மால் பிறருக்கு புது வாழ்க்கை அமையலாம், செல்வம் சேரலாம், தைரியம் தரலாம், புது நம்பிக்கை யளிக்கலாம். இவையெல்லாம் இரக்கத்தின் மூலமாகத்தான் சாத்தியமாகும். பிரதிபலன் எதிர் பாராமல் உதவி செய்வது சிலரின் குணமாகவேகூட இருக்கும் சூழலில் உலக அளவில் உதவி செய்ய ஆர்வம் காட்டுவதில் நம் இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச பொருளாதார அமைப்பு ஆன்லைன் மூலம் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களிடம் , மற்ற நாடுகளுக்கு, உதவுவதில் தங்கள் நாடுகளுக்கு உள்ள பொறுப்புகள் குறித்து என்ன நினைக் கிறீர்கள் என கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் கிடைத்த முடிவுகள்தாம் வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் கலந்து கொண்ட 95 சதவீத இந்தியர்கள், உதவி செய்வதற்கு சாகதமாக பதில் அளித்தனர். அடுத்த இடத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா நாடுகள் உள்ளன. அந்நாட்டினர் 94 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த 87 சதவீதம் பேரும், நைஜீரியாவை சேர்ந்த 84 சதவீதம் பேரும்,சவுதி அரேபியாவை சேர்ந்த 83 சதவீதம் பேரும், சீனாவும் 80 சதவீதம் பேரும் உதவ ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
மொத்தத்தில் இந்த கருத்துக்கணிப்பில், கலந்து கொண்ட 80 சதவீதம் பேர், உதவி காரணமாக அனைத்து நாடுகளும் பயன்பெறும் எனக்கூறியுள்ளனர்.
குடியேற்ற விவகாரத்தில் தெற்கு ஆசியாவை தவிர்த்து, வட அமெரிக்கர்கள் சாதகமாக பதில் கூறியுள்ளனர். குடியேற்ற விவகாரத்தில் ஐரோப்பியர்கள் குறைந்தளவே சாதகமாக பதில் கூறியுள்ளனர். புலம்பெயர்தலால், நாட்டிற்கு நன்மையே என 63 சதவீத அமெரிக்கர்கள் கூறி உள்ளனர். இதேபோன்ற கருத்தை ஜெர்மானியர்கள் 48 சதவீதம் பேரும், இத்தாலியை சேர்ந்த 30 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.
பல நாடுகள் இணைந்து செயல்படுவதால், முன்னேற்றம் காண முடியும் என 83 சதவீதம் அமெரிக்கர்களும், 35 சதவீத ஜப்பானியர்களும், 74 சதவீத பிரிட்டன் நாட்டவர்களும், 65 சதவீத பிரான்ஸ் மக்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.