இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அப்ரென்டிஸ் வாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அப்ரென்டிஸ் வாய்ப்பு!

இந்தியாவிலுள்ள இயற்கை எரி வாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., நிறுவனம் மிகவும் புகழ் பெற்றதாகும். நாடு முழுவதும் பரந்து விரிந்து செயல்படும் இந்த நிறுவனம் அதன் அளவிற்காகவும், சேவை களுக்காகவும் உலக அளவில் பேசப்படும் எண்ணெய் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் அசாம் மாநிலத்தில் உள்ள திக்பாய் ரிபைனரியில் டிரேடு அப்ரென்டிஸ்/கெமிக்கல் பிளான்ட் அட்டென்டண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 25 அப்ரென்டிஸ் பயிற்சியாளர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: டிரேடு அப்ரென்டிஸ்/கெமிக்கல் பிளான்ட் அட்டென்டண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 11ம், கெமிக்கல் டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் 3ம், செக்ரடேரியல் அசிஸ்டென்ட் – டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் 10ம், அக்கவுன்டண்ட் – டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் 1ம் சேர்த்து மொத்தம் 25 இடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி: முதல் பிரிவிற்கு பி.எஸ்சி., பட்டப் படிப்பை இயற்பியல், வேதியியல், கணிதம், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி ஆகிய பிரிவுகளில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டாவது பிரிவுக்கு மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை கெமிக்கல் இன்ஜினியரிங் அல்லது ரிபைனரி அண்டு பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில்முடித்தியருக்க வேண்டும். மூன்றாவது பிரிவுக்கு பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நான்காவது பிரிவுக்கு பி.காம்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஸ்டைபண்டு: மாதம் ரூ.2500/-ஐ ஸ்டைபண்டாகப் பெறலாம்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 22.3.2019

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!