இந்திய ஊடகங்கள் தன்னையே அழித்துக் கொண்டிருக்கிறது ! ஏன் தெரியுமா?

இந்திய ஊடகங்கள் தன்னையே அழித்துக் கொண்டிருக்கிறது ! ஏன்  தெரியுமா?

தற்போதைய நிலையில் நம்மூர் மீடியாக்களிடன் ஒரே ஒரு கேள்வியை 3 விதங்களாகக் கேட்கத் தோன்றுகிறது; இங்குள்ள இந்திய ஊடகங்கள் தன்னை தானே அழித்துக் கொள்ளுமா? அல்லது தன்னைத் தானே அழித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளதா? அல்லது தன்னையே அழித்துக் கொண்டிருக்கிறதா? என்பதுதான் அந்த கேள்வி -கள். இதில் நான் மூன்றாவது கேள்வியை செல்கட் செய்கிறேன். அப்போதுதான் இதை நமக்குள்ளேயே விவாதிக்க முடியும்.

edit oct 16

கொஞ்சம் கடினமாக தோற்றமளிக்கும் இதே கேள்வி-களை கொஞ்சம் மென்மையாகவும் கேட்கலாம். இந்தியப் பத்திரிகையாளர்களான நாம் அரசின் பத்திரிகைத் தொடர்பாளர்களாக மாறி விட்டோமா? அல்ல்து தாய்த் திருநாட்டின் சிப்பாய்களாகி விட்டோமா? தேசியப் பாதுகாப்பு போன்றவற்றில் அரசை கேள்வி கேட்கக்கூடாது என்றெல்லாம் எப்போதிலிருந்து முடிவு செய்தோம்?

இது போன்ற வெளியுறவு, ராணுவம் தொடர்பான விவகாரங்களில் இந்தியப் பத்திரிகையாளர்கள் அரசின் பிரதிநிதிகளாகவே மாறிவிடுகிறார்கள் என்று பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள் குறைப்படுவது முன்னரே உண்டு. அது உண்மைதான்; அத்துடன் பாகிஸ்தான் அரசின் கொள்கைகளையும் ராணுவத்தின் செயல்களையும் பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள் தங்களுடைய சொந்தப் பெயரிலேயே கட்டுரைகளாகப் பத்திரிகைகளில் துணிச்சலாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களுடன் ராணுவத்துக்குள்ள மோசமான உறவை அவர்கள் கேள்வி கேட்கத் தயங்குவதே இல்லை. அப்படி கேட்டதாலேயே ராசா ரூமி, ஹுசைன் ஹக்கானி போன்றவர்கள் தலைமறைவாக வாழ நேர்ந்திருக்கிறது. நஜம் சேத்தியைச் சிறைக்கே அனுப்பி விட்டார்கள்.

அதே சமயம் “பாகிஸ்தானுடன் உங்களுக்கு (அமெரிக்காவுக்கு) வினோதமான உறவு இருக்கிறது, அது ‘எங்களுக்கு’ தீங்கு விளைவிக்கிறது, உங்களுடைய சொந்த அக்கறைக்காக ‘நாங்கள்’ உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது” என்று அமெரிக்க அதிகாரிகளிடம் பேசுகிறோம். இப்படியெல்லாம் பேசுவது அல்லது உரக்க கத்துவது தவறுதான் என்பதை புரியாமல் நாமே அரசின் பிரதிநிதியாய் மாறிவிட்டோம், அதனால்தான் நம் அரசு செய்வது சரியா? தவறா என்று யோசிக்க, அலச, ஆராய மறந்து போகிறோம் என்கிறேன்.

கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா ஆயுதமும் கொடுத்து பயிற்சியும் கொடுத்ததை ‘இந்தியா டுடே’எனக்கு அனுமதி கொடுத்தது. (சக்திவாய்ந்த தலைவராக இருந்த பிரதமர் இந்திரா காந்தி அதற்காக என்னை ‘தேச விரோதி’ என்றே கண்டித்தார்.) அதே விவகாரத்தில் இந்திய அமைதிப் படை இலங்கைக்கு அனுப்பப்பட்டதும் விமர்சனத்டிற்கு ஆளானது. அப்புறம் அமிர்தசரஸ் பொற்கோவிலில் எடுக்கப்பட்ட ‘புளூ ஸ்டார்’ நடவடிக்கை முதல் பஸ்தாரில் துணை நிலை ராணுவப் படைகளை அரசு பயன்படுத்தப்படுவதையெல்லாம் இந்தியப் பத்திரிகையாளர்கள் விரிவாக விவாதிக்கிரோம், கேள்வி எழுப்புகிறோம். பனிப்போருக்கு பிந்திய வெளியுறவுக் கொள்கை கூட விரிவாக அலசப்பட்டிருக்கிறது. அதற்கு நல்ல உதாரணம் இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு.

ஆனால் “ராணுவ வீரர்கள் அல்லாத 4 பேர் சாதாரண ஆயுதங்களுடன் எல்லா பாதுகாப்பு அரண்களையும் மீறி, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் உள்ளேயிருந்த ராணுவ முகாமுக்கு எளிதாக வர எப்படி முடிந்தது?” என்று கரண் தாப்பர் என்ற ஒரே பத்திரிகையாளர்தான் கேட்டார். இதையடுத்துதான் பாதுகாப்பு ஏற்பாட்டில் இருந்த ஓட்டைகளை தரைப்படையில் தளபதியாகப் பணிபுரிந்த லெப். ஜெனரல் ஜே.எஸ்.தில்லான் விரிவாக அலசினார். 1987 அக்டோபரில் இந்திய ராணுவத்தின் ஒரு பிரிகேடுக்குத் தலைமை வகித்த அவர், வெகு விரைவாக யாழ்ப்பாண காட்டைக் கடந்து, குறைந்த உயிர்ச் சேதங்களுடன் முக்கிய இடத்துக்குச் சென்று படையை நடத்தினார்.

இதற்கிடையே கார்கில் சம்பவத்துக்குப் பிறகு தான் இந்தியப் பத்திரிகையாளர்களிடம் மன மாறுதல் ஏற்பட்டது என்பேன். கார்கிலில் பாகிஸ்தானியர் ஊடுருவல் குறித்து தகவல்கள் கசிந்து, ஆனால் அது பற்றி அரசு, ‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை’ என்று 3 வாரங்கள் விடாமல் மறுத்துக் கொண்டேயிருந்தது. கூடவே‘எங்க ஆடகள் யாரும் ஆக்கிரமிக்கலைப்ப’ என்றனர் பாகிஸ்தானியர்கள். கூடவே‘அவ்வளவு தூரம் உள்ளே புகுந்து யாரும் ஆக்கிரமிக்கவில்லை’ என்றது இந்திய ராணுவம். இந்த குழப்பத்தை தீர்க்க மூத்த தளபதிகள் ஆலோசனை மட்டுமே நடத்திக் கொண்டிருந்த போது, டெல்லியிருந்து ஒரு மீடியா குழு கார்கிலுக்குச் சென்றனர்! ராணுவமும் ஊடகமும் ஒன்று கலந்த நிகழ்வாக அது மாறி விட்டது. இதையடுத்து‘நிருபர்களைத் தடுக்காமல் போர் முனைக்கே செல்ல இந்தியா அனுமதித்தது’ என்று சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு எகிறியது. இறுதியாக, ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டப்பட்டதால் எல்லாம் சுபமாக முடிந்தது.

ஆனால் இப்படி ஊடக அடாவடி, கார்கில் வெற்றி கொண்டாட்டத்தில் ஒரு விஷயத்தை அத்தனை பேரும் அலச மறந்து விட்டார்கள் நம் இந்திய எல்லைக்குள். அவ்வளவு பாகிஸ்தானியர்கள் எப்படி நுழைந்தனர்? நம் எல்லைக்குள் இருந்த அதை அல்லது அவர்களைக் கண்டு பிடித்து உறுதிப்படுத்த நமக்கு அவ்வளவு நாட்கள் ஏன் பிடித்தன? இதையெல்லாம் ஆராயத் தவறியதால், கார்கில் சம்பவத்துக்கு யார் காரணம் மற்றும் பொறுப்பு என்று தெரியாமலே போய் விட்டது. ஆனாலும். உள்ளூர் படைத் தலைவர் பலிகடாவானார், ஆனால் அவரும் ராணுவ நீதிமன்றத்தில் எந்த தண்டனை யுமில்லாமல் தப்பிவிட்டார். இது மாதிரியான தேச நலனில் ஏற்பட்ட ஒரு தவறுக்குக் காரணமாக இருக்கும் அரசியல், ராணுவ நிர்வாகிகளைத் தப்பவிடக்கூடாது.

ஆக.. இதுமாதிரி பத்திரிகையாளர்கள் ராணுவத்துடன் சேர்ந்து போர் முனைக்குச் செல்லலாம், செய்திகளைத் தரலாம். ஆனால் தொலைக்காட்சி ஸ்டூடியோவில் உட்கார்ந்து கொண்டு, பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற ராணுவத் தளபதிகளைப் பார்த்து கத்தி கூச்சலிடக்கூடாது; அவர்கள் அருகில் இல்லை என்ற துணிச்சலில் காட்டமாகப் பேசக்கூடாது. கசப்பான உண்மைகளைப் பேசும் பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள் சிரில் ஆல்மைடா, ஆயிஷா சித்திக் போல இந்தியாவில் யாரும் இல்லை என்பது உண்மை. தற்கொலைப்படையாய் செயல்படும் இந்தியப் பத்திரிகையாளர்கள் காட்சி ஊடகத்தில்தான் அதிகம் இருக்கின்றனர்.

இவ்வளவும் எழுதுவதற்குக் காரணமே உரி என்ற இடத்தில் இந்திய ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலும் அதன் எதிர் விளைவும்தான். உண்மையில் 3 வாரங்களுக்கு முன்னால் என்னதான் நடந்தது என்று யாராலுமே சொல்ல முடியவில்லை. ரகசியங்களை மறைப்பதில் இந்திய அரசு கொஞ்சாம் முன்னேறி விட்டதா அல்லது இந்தியப் பத்திரிகையாளர்கள் உண்மைகளைத் தேடுவதை நிறுத்திவிட்டார்களா? இத்தனைக்கும் இதழியியல் பயில சேரும்போதே மாணவர்களுக்குச் சொல்லித் தரும் முதல் பாடம், “அரசாங்கம் உண்மைகளை மறைக்கும் நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்பதுதான். ஆனா அப்படி, இப்படி, எப்படியே வளர்ந்து விட்ட நாமோ அப்படிச் செய்யாமல், அரசு பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர் பார்கிறோம்.

இதையொட்டி “நமக்கு எதிர்ப்புறத்தில் இருப்பது நம்முடைய எதிரி என்பதால் நீங்கள் (அரசு) சொல்வதையும் நம்புகிறோம், சொல்லாததையும் நம்புவோம்” என்று அறிவிக்கத் தயாராக இருக்கிறோம். இன்னொரு தரப்போ “நீங்கள் கூறுவதை கொஞ்சம் கூட நம்பமாட்டோம், எல்லாவற்றுக்கும் வீடியோ ஆதாரம் கொடுங்க.. அப்புறம் நம்புவோம்” என்று. இந்திய ஊடகங்கள் தன்னையே அழித்துக் கொண்டிருக்கிறது  என்று ஏன் சொல்கிறேன் என்று இப்போது புரிகிறது அல்லவா?

சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.

தொடர்புக்கு: [email protected]

Related Posts

error: Content is protected !!