40க்கு பதில் 400 : இதுதான்(டா) இந்தியா!
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! ..இன்று அதிகாலை நடந்த அதிரடித் தாக்குதலின் சிறப்பு என்ன?
புல்வாமாவில் தாக்குதல் நடத்திய உடனேயே பதிலடி இருக்கும் என்று ஜெய் ஷே முகமது எதிர்பார்ததது. அதனால் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் இருந்த முகாம்களை 100 கிலோ மீட்டர் உள்ளே, அதாவது பாகிஸ்தான் எல்லைக்குள் மாற்றியது. அது பத்திரமான மலைப்பகுதி.எவ்வளவு பத்திரமானது என்றால் அமெரிக்காவிற்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு ஒசாமா பின் லேடன் ஒளிந்திருந்த இடம் அது. அது 5 நட்சத்திர ஓட்டலின் வசதிகளோடு கூடிய இடம்.
தீவிரவாதிகள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது பாகிஸ்தானில் இருக்கிறது. இந்தியா எல்லை தாண்டி வந்து தாக்காது என்று நினைத்தது. ஏனென்றால் 1971க்குப் பிறகு, 48வருடங்களாக இந்தியா எல்லை தாண்டி சென்று தாக்கியதில்லை
அதன் கணக்குகள் பொய்த்தன. அந்தக் காலங்கள் மலையேறிவிட்டன என்று அதற்குத் தெரியாது.
இந்தியா தீவிரவாதிகள் பின் வாங்கக் காத்திருந்தது. அதே நேரம் வேறு பல வழிகளில் அழுத்தம் கொடுத்து வந்தது
தீவிரவாதிகள் இடம் மாறியதும் துணிந்து எல்லை தாண்டிப் போய் போட்டுத் தள்ளியது. இறந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை 400! (375 பயிற்சியாளர்கள்+25 பயிற்சி அளிப்பவர்கள்.)
40க்கு பதில் 400!
இதுதான்(டா) இந்தியா!