மாதம் ஒரு கோடி செல்போன் வாடிக்கையாளர்கர்கள் அதிகரிப்பு – ட்ராய் தகவல்!

மாதம் ஒரு கோடி செல்போன் வாடிக்கையாளர்கர்கள் அதிகரிப்பு – ட்ராய் தகவல்!

அதிகப்படியான செல்போன் பயன்பாடு, மனிதனின் பரிணாமத்தையே மாற்றியமைக்கும் நிலை வரை மாறிவிட்டது என விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்துள்ள நிலையில் செல்போன் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் இந்த காலக்கட்டத்தில், பெரும்பாலன மக்கள் தங்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள செல்போனை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஆன்லைனின் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கிய இந்த வேலையில் மக்கள் பணபரிவர்த்தனைக்காவும், தகவல் தெரிந்துக்கொள்ளவும் பயன்படுத்திவருகின்றனர். இந் நிலையில்

இதுகுறித்து  ட்ராய் ஆணையம் மேலும் கூறியுள்ள தகவல் இதோ:

நடப்பாண்டு ஜூலையில் 116.83 கோடியாக இருந்த செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 117.1 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த தொலைபேசி பயனாளா்கள் எண்ணிக்கையில் இது 98 சதவீதமாகும்.

கணக்கீட்டு காலத்தில், ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 84.45 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துக் கொண்டுள்ளது. அதேசமயம், வோடஃபோன் ஐடியாவிலிருந்து 49.56 லட்சம் வாடிக்கை யாளா்களும், பாா்தி ஏா்டெல் நிறுவனத்திலிருந்து 5.61 லட்சம் பேரும், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து 2.36 லட்சம் வாடிக்கையாளா்களும் வெளியேறியுள்ளனா்.

தரைவழி தொலைபேசி வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 1.5 லட்சம் குறைந்து 2.08 கோடி ஆனது. இப்பிரிவில், பிஎஸ்என்எல் நிறுவனம் 1.41 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்தது. அதேசமயம், வோடாஃபோன் ஐடியா, ஏா்டெல் நிறுவன வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கண்டது.

பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 1.87 சதவீதம் அதிகரித்து 61.55 கோடியாக இருந்தது. இதில், ஜியோ இன்ஃபோகாம் 34.82 கோடி வாடிக்கையாளா்களை தக்க வைத்துக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. பாா்தி ஏா்டெல் (12.67 கோடி), வோடஃபோன் ஐடியா (11.11 கோடி), பிஎஸ்என்எல் (2.15 கோடி) நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று ட்ராய் தெரிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!