திமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்!

திமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்!

தேர்தலில் போட்டியிடும் நேரத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் வேறோரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளதால் திமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சின்ராஜ், ம.தி.மு.க.வின் கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரும் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதாவது தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது என்றும் இது குறித்து தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இமனுவை விசாரித்த நீதிபதிகள், கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பொதுவாக தேர்தலில், கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையை விட, சின்னமே பெரும்பங்காற்றுவதாகத் தெரிவித்த நீதிபதிகள் சின்னத்தை வைத்து தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் தேர்தலில் வெற்றி, தோல்வியை விட நேர்மையாக போட்டியிடுவது தான் முக்கியம் என்றும் தெரிவித்தனர். அப்போது ஒரு கட்சியை சேர்ந்தவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. எனினும் தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்று கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து சுப்ரிம் கோர்ட் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம், தி.மு.க., அ.தி.மு.க., அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அடுத்த மாதம் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

error: Content is protected !!