ஹீரோ டீசரை சல்மான் வெளியிட்டதன் பின்னணி தெரியுமா?

ஹீரோ டீசரை சல்மான் வெளியிட்டதன் பின்னணி தெரியுமா?

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. கே.ஜே.ஆர் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  படக்குழு தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் சூழலில் ‘தபாங் 3’ படத்தின் புரொமஷனல் நிகழ்ச்சிக்கு வந்த சல்மான்கான் இந்தி பேசும் பிரதேசங்களிலும் தமிழ்ப் படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை விவரித்தவர், தனது சொந்த ஆர்வத்தின் காரணமாக சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் டீசரையும் வெளியிட்டார். தனது மைக்ரோ பிளாக்கில் டீசரை வெளியிட்ட சல்மான் ‘ஹீரோ’ படத்தின் ஸ்டைலான அம்சங்களையும் வெகுவாகப் பாராட்டினாராம்.

இது குறித்து விவரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் அதிபர் கோட்டபாடி ராஜேஷ் .
“நாங்கள் எதிர்பார்த்தற்கும் மேலாக கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், படத்தின் டீசரை சல்மான் சாரிடம் காட்ட வேண்டும் என்றுதான் நினைத்தோம். டீசரைப் பார்த்து ரசித்த சல்மான் கான் , தானாகவே முன் வந்து இதை நானே வெளியிடுகிறேனே என்றதுடன் டீஸரில் பங்கு பெற்ற நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் கேட்டறிந்தார். சல்மான் தமிழ்த் திரையுலகம் குறித்து எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், ஹீரோ படம் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும், தான் அதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு டிசம்பர் 20 என்பது ஒரு மிக முக்கியமான தினமாகும். காரணம், நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பான ஹீரோ வெளியாகும் அதே தினத்தில், விநியோகம் செய்யும் தபாங் 3 படமும் வெளியாகிறது.

 

error: Content is protected !!