தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங் மேன் ஜாப் ரெடி!
தமிழகத்தின் பெருமைக்குரிய நிறுவனங்களுள் ஒன்றான தமிழ்நாடு மின்சார வாரியம் எனப்படும் டி.என்.இ.பி., வாரியயத்தில் கேங் மேன் பிரிவில் காலியாக இருக்கும் 5000 இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
காலியிட விபரம் : டி.என்.இ.,பி., யில் மேற்கண்ட காலியிடங்கள் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சென்னையில் நிரப்பப்பட உள்ளன.
இதர விபரங்கள் : ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பட்டதாரியாக இருக்கக் கூடாது. தமிழில் பேச, எழுத, படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
வயது: 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:ரூ.1000/-ஐ டி.என்.இ.பி.,யின் மேற்கண்ட பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தப் பணியிடங்கள் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளின் படி நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை: பிசிக்கல் டெஸ்ட், எழுத்துத் தேர்வு என்ற அடிப்படையில் இருக்கும்.
விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2019 மே 30.
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு