கொடநாடு கொலைகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லே! – எடப்பாடி மறுப்பு

கொடநாடு கொலைகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லே! – எடப்பாடி மறுப்பு

ஜெ.வுக்கு சொந்தமான கொடநாடுகளில் நடந்த கொலைகளுக்கும் சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை; ஆனால் உள் நோக்கத்தோடு மேத்யூ வெளியிட்ட வீடியோ தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஏற்பாடுகள், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆலோசனை நடை பெற்றது.இந்த ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “கொடநாடு கொள்ளை குறித்த வெள்ளீயன்று வெளியிடப்பட்ட வீடியோ ஆவணம் குறித்த புகார் நேற்று அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கொடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது; அதனை வன்மையாக்  கண்டிக் கிறோம்

தவறான செய்தி வெளியிட்டவர்கள், வீடியோ விவாகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது வழக்கு விசாரணையில் விரைவில் கண்டறியப்படும். கொடநாடு சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

தமிழகத்தில் எந்த்த் திட்டமும் கொண்டு வரக்கூடாது என்பது திமுகவின் நோக்கமாக உள்ளது. திமுகழக ஆட்சியில் உள்ளாடசி அமைச்சராக இருந்தவர் முக.ஸ்டாலின்தான் . கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை கவனித்து நிறைவேற்ற வேண்டியது அவரின் பொறுப்பாகும் பதவியில் இருக்கும் போது கிராமப்புற மக்களுக்குக்கான அடிப்படை வசதிகளை செய்ய மு.க ஸ்டாலின் தவறிவிட்டார்.

இப்பொழுது அவர் செய்யத் தவறிய மக்களின் அடிப்படை வசதிகளுக்கான பணிகளை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் . பொங்கல் பரிசாக ரூ.1000 கொடுத்ததற்கு எதிராக ஸ்டாலின் தனது கட்சியினரை கொண்டு வழக்குப்போட வைத்தார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததற்கு காரணமும் திமுக தான். திமுகவின் கிராம சபை கூட்டம் ஒரு அரசியல் நாடகம் . ஸ்டாலினால் குறுக்கு வழியில் அரசை கவிழ்க்க முடியாது” இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அடிசினல் ரிப்போர்ட்:

அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த ராஜன் சத்யா அளித்த புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் போலி வீடியோ குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர் என செய்தி வெளியாகி உள்ளது. மேத்யூஸ் மற்றும் வீடியோவில் பேசிய அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!